• Thursday, May 15, 2025

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli

“மக்களுக்கு சேவை வழங்காத அமைச்சுக்கு இராஜாங்க அமைச்சு எதற்கு? ” ஆனந்த பாலித

- வீடியோ இணைப்பு -

By Admin Last updated Sep 14, 2022
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
VIDEO NEWS

இலங்கை மக்களுக்குத் தேவையான எரிபொருளையோ மின்சாரத்தையோ வழங்க முடியாத மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சிற்கு இராஜாங்க அமைச்சு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கையின் சிரேஷ்ட தொழிங்சங்கத் தலைவர் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Awurudu Kumra Kumari

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித, அமைச்சருக்கு மேலதிகமாக இராஜாங்க அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டாலும் மக்களுக்கு மகிழ்ச்சித் தரக்கூடிய எந்தவொரு விடயமும் இடம்பெறவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

Catchup shows

நாட்டிற்குத் தேவையானா எரிபொருளில் நூற்றுக்கு 50 வீதம் கூட வழங்க முடியாத பெற்றோலிக் கூட்டுத்தாபனம் மற்றும் நாட்டிற்கு தேவையான மின்சாரத்தை சரியாக வழங்க முடியாத மின்சார சபைக்கும் இராஜாங்க அமைச்சு நியமிக்கப்பட்டுள்ளது. எனினும் எதுவும் இடம்பெறவில்லை. ஏதாவது இடம்பெறுமென நாங்களும் பார்த்துக்கொண்டிருந்தோம். இந்த நிமிடம் வரை மின்சாரம் மற்றும் எரிபொருள் தெடர்பில் மக்களுக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய எந்தவொரு விடயமும் இடம்பெறவில்லை. இன்று மின்சாரத்திற்கு பொறுப்பான அமைச்சர் ட்விட்டர் அமைச்சராக மாறியுள்ளார். போராட்டத்தால் பிரதமராகவும், நிதியமைச்சராகவும், ஜனாதிபதியாகவும் நியமனத்தை பெற்றவரால் இன்று எரிபொருள் மோசடி மற்றும் ஊழலை நிறுத்த முடியாமல் போயுள்ளது. இன்று எம்மிடம் காணப்படும் குறிப்பிட்ட சில டொலர்களையும் கொள்ளையடிக்கின்றனர். என்றார்.

தற்போது கடலில் நங்கூரமிடப்பட்டுள்ள எரிபொருள் கப்பல்களுக்கான கட்டணத்தை செலுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முடிந்தால் தெளிவுபடுத்துமாறு துறைக்குப் பொறுப்பான அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சரிடம் தான் சவால் விடுவதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித மேலும் தெரிவித்துள்ளார்.

Prev Post

சிறைகளில் முஸ்லிம்களிடம் மனிதாபிமானமற்ற முறையில் தேடுதல்

Next Post

‘குத்தகை நிறுவனங்கள் வட்டி வீதத்தை மும்மடங்கு அதிகரித்துள்ளன’ அசங்க ருவன் பொத்துபிட்டிய

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அரசாங்கத்திற்கு ஒரு சிவப்பு…

May 12, 2025

அரசுக்கு எதிராக ஆட்சியை அமைப்பதற்கு நிபந்தனையின்றி ஆதரவு…

May 12, 2025

பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களின் நிலையைப் பார்வையிட…

May 12, 2025

பிரதமர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தனது வாக்கைப் பதிவு…

May 6, 2025

ஜனாதிபதி வாக்களித்தார்

May 6, 2025

மாணவி அம்ஷிகாவின் மரணத்துக்கு சமூகம் பொறுப்புக்கூற வேண்டும்…

May 5, 2025

தனக்கு நடந்த அநீதிக்கு நியாயம் கிடைக்கவில்லையென்பதால் எனது…

May 5, 2025

இலங்கையில் முதலீடு செய்ய வியட்நாமின் வின்குருப்…

May 5, 2025

ஜனாதிபதியின் கிரீஸ் பணம் குறித்து CID ல் முறைப்பாடு

May 5, 2025

வாக்குச்சீட்டில் இவற்றை செய்ய வேண்டாம்- தேர்தல் ஆணைக்குழு…

May 5, 2025
Prev Next 1 of 419
Facebook
© 2025 - Meiveli. All Rights Reserved.