• Tuesday, June 9, 2026

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli

திருடர்கள், கொலைகாரர்கள் அற்ற கட்சியே நாட்டை மீட்கும்; சந்திரிக்கா குமாரதுங்க

- வீடியோ இணைப்பு -

By Admin Last updated Sep 5, 2022
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
VIDEO NEWS

ஊழலற்ற கொலை கொள்ளைகளில் ஈடுபட்டவர்களுக்கு வாய்ப்பு வழங்காத அரசியல் கூட்டணி ஒன்றின் ஊடாக நாட்டை மீளக் கட்டியெழுப்ப முடியுமென   இலங்கையின் சிரேஷ்ட அரசியல் தலைவர்களில் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.

புதிய அரசியல் கட்சியில் நாட்டை நேசிக்கும் அனைவரையும் இணைத்துக்கொள்வது முக்கியமான விடயம் எனக் குறிப்பிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, எனினும் திருடர்களையும், கொலைகாரர்களையும் அடையாளம் கண்டு அவர்களை புறந்தள்ள வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையிலான,  பத்தரமுல்லையில் அமைக்கப்பட்டுள்ள நவ லங்கா நிதஹாஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தை திந்து வைத்து உரையாற்றுகையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

Catchup shows

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முழுநாட்டிலும் இன, மத பேதங்களை மறந்து, அனைத்து கட்சிகளையும் சேர்ந்த நாட்டை நேசிக்கும் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டுமென குமார வெல்கம உரையாற்றும்போது தெரிவித்திருந்தார். எனினும் ஒன்றை நான் தெரிவிக்கின்றேன். திருடர்களை இணைத்துக்கொள்ள வேண்டாமென கோருகின்றேன். தெரிவு செய்யுங்கள். கொலைகாரர்கள், திருடர்களை ஒன்றிணைத்தால் முன்கொண்டுச் செல்ல முடியாது. போராட்டக்காரர்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் அவர்களை அடக்குகின்றது. கைது செய்கின்றது. இந்த போராட்டம் இன்னும் நிறைவடையவில்லை ஆரம்பம் மாத்திரமே. ஆகவே நாம் அனைவரும் அவர்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும். நாட்டிற்கு என்னத் தேவையென்ற கோணத்தில் சிந்தித்து செயற்பட வேண்டும். என்றார்.

நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள பெரும்பாலானவர்கள் ஐந்து வருடங்களுக்கு நாட்டின் சொத்துக்களை முடிந்தவரை கொள்ளையடித்து, மக்கள் தொடர்பில் சிந்திக்காது தன்னை வளர்த்துக்கொண்டு வெளியேறிவிட வேண்டுமென்ற எண்ணத்திலேயே செயற்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இதன்போது வலியுறுத்தினார்.

Prev Post

விடைபெறுகிறார் ஷெரினா வில்லியம்ஸ்

Next Post

ஐ.நாவின் பரிந்துரைகளை செயற்படுத்த முடியாது, அமைச்சர் அலி சப்ரி அறிவிப்பு

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

உள்துறையை வேறொரு அமைச்சரிடம் ஒப்படைக்கிறாரா முதல்வர் விஜய்:…

Jun 8, 2026

சிங்கப்பெண் அதிரடிப்படை : சென்னையில் நாளை தொடங்கி வைக்கிறார்…

Jun 8, 2026

யாழ் சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைக்க தடை:…

Jun 8, 2026

எத்தியோப்பியாவில்  சர்வதேச குற்ற கும்பல் ஒன்றினால்…

Jun 8, 2026

சொல்லிசைக் கலைஞர் சங்கீத்சனை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி,…

Jun 8, 2026

சட்ட மா அதிபர் பரிந்துரைகளுக்கு அமைய அரசு தேர்தல்களை…

Jun 8, 2026

செம்மணியில்  300 க்கும் மேல் எலும்புக் கூடுகள் அடையாளம்:  …

Jun 8, 2026

விடுதலைப் புலிகளின் தலைவரது இடத்தைக் காட்டிக் கொடுத்த சுரேஷ்…

Jun 8, 2026

சந்தேக நபரின் தராதரம் விசாரணைகளுக்கு தடையல்ல;…

Jun 8, 2026

கொழும்பில் அதிரடி: 19 கோடி ரூபாய் போலி அமெரிக்க டொலர்களுடன்…

Jun 8, 2026
Prev Next 1 of 158
Facebook
© 2026 - Meiveli. All Rights Reserved.