உள்துறையை வேறொரு அமைச்சரிடம் ஒப்படைக்கிறாரா முதல்வர் விஜய்: அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
Meiveli Media Team

தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய்இ தற்போது தன்னிடம் உள்ள முக்கிய துறையான உள்துறைப் பொறுப்பை அமைச்சரவையில் உள்ள வேறொரு அமைச்சரிடம் ஒப்படைப்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக வெற்றிக் கழகத் தலைவரான விஜய் முதல்வராகப் பதவியேற்றபோது காவல்துறை, மகளிர் நலன் மற்றும் இளையர் நலன் உள்ளிட்ட முக்கியப் பிரிவுகளை உள்ளடக்கிய உள்துறை அமைச்சகப் பொறுப்பைத் தன்வசமே வைத்திருந்தார். இந்நிலையில், நிர்வாக ரீதியிலான பணிச்சுமையைக் குறைக்கவும்இ அரசின் 400-க்கும் மேற்பட்ட புதிய மக்கள் நலத் திட்டங்களைக் கண்காணிப்பதில் முழு கவனம் செலுத்தவும் அவர் இந்த முடிவை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது அமைச்சரவையில் உள்ள மூத்த அமைச்சர் ஒருவரிடம் இத்துறை ஒப்படைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தத் தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகத் தமிழகத்தில் முதலமைச்சராகப் பொறுப்பேற்பவர்களே காவல்துறை மற்றும் உள்துறையைத் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது வழக்கமாக உள்ள சூழலில், முதல்வர் விஜய்யின் இந்த அதிரடித் திட்டம் தவெக அரசின் புதிய நிர்வாக மாற்றத்திற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது. எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

