சர்ச்சைக்குரிய சீனக்கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சென்றடைந்துள்ளது.

அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்திய சீனாவின் யுவான் வோங் – 5 கண்காணிப்பு கப்பல் இன்று  காலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சென்றடைந்துள்ளது.

முன்னதாக, இந்த கப்பல் ஓகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டு, ஆகஸ்ட் 17ஆம் திகதி வரை தரித்திருக்கும் என திட்டமிடப்பட்டிருந்து. எனினும், பின்னர் ஏற்பட்ட சர்ச்சை நிலையை அடுத்து, கப்பலின் வரவில் தாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையில், இன்று 16 ஆம் திகதி முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் குறித்த கப்பல் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகாரத்துறை அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.