• Wednesday, June 17, 2026

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli

காணாமல் போன உறவுகளுடைய புனித போராட்டம்:சர்வதேச விசாரணையே அவசியம்

By Admin On Sep 13, 2022
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
VIDEO NEWS

காணாமல் போன உறவுகளுடைய புனித போராட்டம் வெற்றியளிக்க வேண்டுமாக இருந்தால் அவர்கள் கோருகின்ற சர்வதேச விசாரணையே அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஐ.நா கூட்டத்தொடரில் எங்கள் சார்பாக சுரேன் குருசாமியை அனுப்பியிருப்பதாகவும்,
ஐ. நா தீர்மானத்தின் அடிப்படையிலே எங்களுடைய இன பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

காணாமல் போனவர்கள் உடைய உறவுகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.அவர்களுடைய புனித போராட்டம் வெற்றியளிக்க வேண்டுமாக இருந்தால் அவர்கள் கோருகின்ற சர்வதேச விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதே. ஐ. நா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தகின்ற ஒரு விளைவினை ஐ.நா சபை மேற்கொள்ள வேண்டும் என அவர் கறிப்பிட்டார்.

Catchup shows

அதிலே குறிப்பாக தேசிய கட்சிகளின் தலைவர்கள் கையெழுத்திட்டு அனுப்பியது அறிக்கையில், மனித உரிமை மீறல்களிலே சம்பந்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதியாக இருந்தாலும், யாராக இருந்தாலும் அவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை அளிக்க வேண்டும் என குறிப்பிட்டள்ளதாக தெரிவித்தார். அந்த வகையிலே புலம்பெயர்ந்த உறவுகளும் தங்களுடைய செயற்பாட்டிலே முனைப்போடு சேர்ந்து இணைந்து செயற்படுவதாகவும, இந்த விடயங்களை ஐ. நா இந்த கூட்டத்தொடரிலே ஒரு முடிவான முடிவாக எடுக்க வேண்டும் என்பதும் ஐ. நாவினுடைய, அதிலே இருக்கின்ற நாடுகளுக்கும் இந்த கோரிக்கைகளை  அனுப்பியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆகவே இந்தியா, அமெரிக்கா உட்பட ஏனைய ஐ.நா சபையினுடைய அங்கத்துவ நாடுகள் இனப்பிரச்சினை சார்பாக ஐ.நா எடுத்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆதரவை தர வேண்டும் என்பதும் ஆதரவை பெற முயற்சிகளை மேற்கொள்ளுவதுமாக புலம்பெயர்ந்த உறவுகளோடு  செயற்பாடுகள் தொடர்ந்து நடக்கும்’ என மேலும் தெரிவித்தார்.

Prev Post

மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் புதிய அரசியல் கூட்டணி: நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு

Next Post

பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு மாட்டுவண்டி மற்றும் குதிரைவண்டி பந்தயம்

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

பாடசாலைகளுக்கிடையிலான கரம் சுற்றுப்போட்டி – வடக்கின்…

Jun 17, 2026

இலங்கையின் தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் (2026–2030)…

Jun 17, 2026

பயன்படுத்திய வாகனங்களுக்கான 15% வரிச்சலுகை நீக்கப்பட்டால்…

Jun 17, 2026

கோட்டாபய ராஜபக்ஷவின் நீதிமன்ற கோரிக்கை ஈஸ்டர் தாக்குதல்…

Jun 17, 2026

இந்த இக்கட்டான தருணத்தில் நாட்டிற்காக நாமனைவரும் ஒன்றிணைய…

Jun 17, 2026

லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையானார் யோஷித ராஜபக்ஷ!

Jun 17, 2026

“சுரேஷ் சலே சித்திரவதைக்குள்ளாக்கப்படுகிறார்;…

Jun 16, 2026

நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக ஸ்ரீலங்கா பொதுஜன…

Jun 16, 2026

501 மில்லியன் ரூபாய்க்கும் மேலான நிதி ஒதுக்கீட்டில்…

Jun 16, 2026

2026 உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு சமிந்த்ராணி…

Jun 16, 2026
Prev Next 1 of 163
Facebook
© 2026 - Meiveli. All Rights Reserved.