TELO, PLOTE, மற்றும் EPRLF இன் பிரித்தானிய கிளையின் கலந்துரையாடல் 09/07/23 ஞாயிறு அன்று இடம் பெற்றது
![](https://meiveli.com/wp-content/uploads/2023/07/WhatsApp-Image-2023-07-11-at-07.06.55.jpeg)
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தேசிய அமைப்பாளருமான, கெளரவ கோவிந்தன் ஜனா கருணாகரம் தலைமையில் TELO, PLOTE, மற்றும் EPRLF இன் பிரித்தானிய கிளையின் நிர்வாக உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் 09/07/23 ஞாயிறு அன்று லன்டன் ஹரோவில் அமைந்துள்ள கலந்துரையாடல் மண்டபம் ஒன்றில் இடம் பெற்றது.
சுமார் இரண்டுமணி நேரம் நடைபெற்ற இந் நிகழ்வினை இலங்கையில் இருந்து வருகை தந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றஉறுப்பினரும், தேசிய அமைப்பாளருமான கெளரவ கோவிந்தன் ஜனா கருணாகரம் தலைமை தாங்கியிருந்தார்.
தமிழீழ விடுதலை இயக்கம் பிரித்தானிய கிளை சார்பாக திரு. சாம், திரு. ரூபன் அவர்களும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் பிரித்தானிய கிளை சார்பாக திரு . சிவபாலன், திரு. அல்வின், திரு. முகுந்தன் அவர்களும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சார்பாக திரு. பிரபு, திரு. பரமேஸ், திரு .சஜீ அவர்களும்கலந்து கொண்டனர்.
கெளரவ ஜனா அவர்களால், தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து தமிழரசு கட்சி வெளியேறிய
பின் மீண்டும், புதிதாகவும் இனைந்த கட்சிகளுடன் உருவான புதிய கூட்டின் இன்றைய கள நிலவரங்கள்,யாப்பு, நிர்வாக கட்டமைப்பு,எதிர்கால வேலைத் திட்டங்கள், புலம்பெயர் நாடுகளில் ஆற்ற வேண்டிய வேலைத்திட்டங்கள், அடுத்த ஆண்டில் சந்திக்க போகும் தேர்தல்கள், தலைமை காரியாலயம் தொடர்பான விடயங்கள், மற்றும் நிதி தொடர்பான விடயங்கள் என பல விடயங்கள் தெரிவிக்கபட்டது.
அவற்றை உள்வாங்கிய உறுப்பினர்கள் அதற்கான தமது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் தமது கேள்விகளையும் முன் வைத்து பதில்களையும் ஏற்றுக்கொண்டனர். இக் கூட்டத்தில் பங்கு பற்றிய உறுப்பினர்களே பிரித்தானியாவின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிர்வாக குழு உறுப்பினர்கள் என்றும், ஜனநாயக போராளிகள் கட்சியின் உறுப்பினர்கள் வருகை தராததால் அடுத்த கூட்டத்தில் அவர்களையும்
உள் வாங்கி நிர்வாக கட்டமைப்பை தெரிவு செய்தல் என்ற முடிவு எக மனதாக ஏற்றுக கொள்ளப்பட்டு மிகவும் பெறுமதி வாய்ந்த கலந்துரையாடலாக நிறைவேறியது.
இக் கலந்துரையாடலுக்கு வருகை தந்த கெளரவ ஜனா அவர்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரித்தானிய கிளை சார்பாக மனமார்ந்த நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டனர்.