• Saturday, June 3, 2023

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli
SUBSCRIBE

பொலிஸாரின் அடக்குமுறைக்கு எதிராக முறைப்பாடு

By Admin Last updated Sep 15, 2022
113
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
DRAMA SCHOOL

SUPPORT TO MEIVELI

இலங்கையில் சாதாரண பொதுமக்களுக்கு எதிராக பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் மரண அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல் சம்பவங்களை தடுக்கக் கோரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தான் அவ்வாறான ஒரு சம்பவத்தை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ள யூத் போர் ஷேஞ்ச் அமைப்பின் தேசிய அமைப்பாளர் லஹிரு வீரசேகர, எதிர்காலத்தில் வேறு எவருக்கும் அவ்வாறான நிலைமை ஏற்படக்கூடாது என தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் குறித்த முறைப்பாட்டை பதிவு செய்தததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நானும் எனது நண்பரும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த சமயத்தில் மருதானை பொலிஸ் நிலைய பொலிஸ் பொறுப்பதிகாரி உள்ளிட்ட மூன்று அதிகாரிகள் என்னை கைது செய்தனர். என்னை கைது செய்தமைக்கான காரணத்தை தெரிவிக்காமல் என்னை அவர்கள் கைது செய்து வாகனத்திற்குள் தள்ளிய அவர்கள் என்னுடைய கைத்தொலைபேசி உள்ளிட்ட உடைமைகளை கோரினர். நான் அவற்றை வழங்க மறுத்தேன்.  என்மீது தாக்குதல் நடத்தியதோடு, மரண அச்சுறுத்தல் விடுத்தனர். அவர்கள் முடியுமானால் என்னை கொலையும் செய்திருக்க முடியும். கடந்த காலங்களில் பொலிஸாரால் பொது மக்கள் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். ஆகவே எதிர்காலத்தில் இவ்வாறான விடயங்களை இடம்பெறுவதை தடுக்கும் வகையிலேயே நாம் இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தோம். எங்களால் முடிந்த அனைத்த விடயங்களையும் முன்னெடுத்து இவ்வாறான விடயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுப்போம்.என்றார்.

கடந்த காலங்களில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பலர் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்த நிலையில் குறித்த அனைவர் சார்பாகவுமே இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளதாக யூத் போர் ஷேஞ்ச் அமைப்பின் தேசிய அமைப்பாளர் லஹிரு வீரசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

Prev Post

“உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளின் நிலை மோசமடைகிறது“ மனோ எம்.பி

Next Post

ஈழத்தை வென்றெடுக்க மேற்குலக நாடுகள் ஆதரவு: மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் பிரதிபா மஹாநாமஹேவா தெரிவிப்பு

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

ஹவுரா எக்ஸ்பிரஸ், சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், சரக்கு ரெயில்…

Jun 3, 2023

பரீட்சைக் கடமைகளிலுள்ள அதிபர் சேவை நேர்முகத் தேர்வு…

Jun 2, 2023

ஆடுகளும் காப்பீடு செய்யப்பட வேண்டும் எனத் தீர்மானம்.

Jun 2, 2023

யாழ்ப்பாண மாவட்டத்தில்  மாணவர்களின் பாடசாலை இடைவிலகல்  …

Jun 2, 2023

தாய்லாந்தின் தொழில்முனைவோர்களுக்கு இலங்கையில் முதலீடு செய்ய…

Jun 2, 2023

ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் தையிட்டி விகாரை தொடர்பில்…

Jun 2, 2023

எதிர்க்கட்சியினர் இரட்டை வேடம் போடுவதாக பாராளுமன்ற…

Jun 2, 2023

மாணவர்கள் ஊடாக புறாக்களைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தல்.

Jun 2, 2023

எதிர்காலத்தில் கையடக்க தொலைபேசிகளின் விலை குறையும்.

Jun 2, 2023

மகாவலி  ஜே வலயத்துக்கு தகவல் வழங்க கூடாது என ஒருங்கிணைப்புக்…

Jun 2, 2023
Prev Next 1 of 188
Facebook
Facebook
© 2023 - Meiveli. All Rights Reserved.