• Friday, November 14, 2025

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli

போராட்டக்காரர்களை அச்சுறுத்தி போராட்டத்தை நிறுத்த முடியாது’ அஜந்தா பெரேரா

By Admin On Sep 8, 2022
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
VIDEO NEWS

அச்சுறுத்தும் வகையில் தொடர்ச்சியாக போராட்டக்காரர்களை குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அழைப்பதால் அச்சமடையப்போவது இல்லையென தென்னிலங்கையில் சிவில் சமூக செயற்பாட்டாளரும், சூழலியலாளருமான கலாநிதி அஜந்தா பெரேரா அரசாங்கத்தை எச்சரித்துள்ளார்.

எவ்வாறான அடக்குமுறைகள் தொடர்ந்தாலும், கைதுகள் விசாரணைகள் இடம்பெற்றாலும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் தொடருமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

காரணம் எதுவும் அறிவிக்கப்படாமல் கலாநிதி அஜந்தா பெரேரா குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில், இதுத் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

Catchup shows

அவர் மேலும் தெரிவிக்கையில்,

போராட்டத்தில் பங்கேற்ற அன்னையர்கள் அனைவரும் இந்தப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பார்கள். காரணம் எங்கள் போராட்டம் எமது உள்ளத்தில் காணப்படுகின்றது. அதற்கு காரணம் எதிர்கால எமது சந்ததிக்காக நல்லதொரு நாட்டை விட்டுச் செல்ல வேண்டுமென நாம் நினைக்கின்றோம்.  தொடர்ச்சியான குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு எம்மை அழைத்தார்கள் என்பதற்காக நாம் போாராட்டத்தை கைவிடப்போவது இல்லை. எமது உள்ளத்தில் உள்ள போராட்டம் தொடரும். போராட்டத்தின் ஊடாக உருவான ஜனாதிபதியாலும், பிரதமராலும்கூட இந்த நாட்டை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. இதற்காகவா நாம் போராட்டங்களை முன்னெடுத்தோம். பொருட்களின் விலைகளை அதிகரித்து மக்களை பட்டினிச் சாவில் தள்ளவா 23.3 மில்லியன் மக்கள் வீதிக்கு இறங்கினார்கள்? நாங்கள் வருமானத்தை உழைப்பதற்காக இந்தப் போராட்டத்தில் ஈடுபடவில்லை. இருக்கின்ற பணத்தையும் இழந்தே போராட்டத்தில் பங்கேற்றோம். இந்த போராட்டம் தொடரும். என்றார்.

சிவில் சமூக செயற்பாட்டாளரும், சூழலியலாளருமான கலாநிதி அஜந்தா பெரேரா கடந்த 2020ஆம் ஆண்டு தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் களமிறங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Prev Post

நாடாளுமன்றத்தில் அனைவரும் கொள்ளையர்கள், வீட்டுக்கு அனுப்புவோம்’ அருட்தந்தை சத்திவேல்

Next Post

பேரரசியின் மறைவு அறிவிப்பு. முன்கூட்டியே திட்டமிடப்பட்ட மரணச் சடங்கு ஏற்பாடுகள், அரசராகின்றார் சார்ள்ஸ்.

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

இலங்கையின் நீர்நிலைகளைச் சுத்தப்படுத்த புதிய ரோபோ இயந்திரம்!

Nov 13, 2025

இரட்டை உலக சாதனை படைத்த சாமுத்ரிகா!

Nov 13, 2025

பருத்தித்துறை – சுப்பர்மடம் கடற்பகுதி ஊடாக கேரள கஞ்சா…

Nov 3, 2025

கைப்பற்றப்பட்ட பலநாள் மீன்பிடிப் படகில் போதைப்பொருள்…

Nov 2, 2025

ஆழ்கடலில் போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் உள்ளூர்…

Nov 2, 2025

ஊடகத்தினருக்கான சிறப்பு கண் சிகிச்சை முகாம்…

Nov 1, 2025

மலேசிய கடலோர காவல்படை கப்பல் ‘KM BENDAHARA’ தீவை விட்டு…

Oct 31, 2025

நாட்டில் சட்டம் ஒழுங்கு எதிர்கொள்ளும் சவால்களுக்கு மத்தியில்…

Oct 31, 2025

இலங்கை மற்றும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் (NUS) PhD…

Oct 31, 2025

தரம் குறைந்த அரிசியை விற்பனை செய்த வியாபார நிலையங்களுக்கு…

Oct 31, 2025
Prev Next 1 of 420
Facebook
© 2025 - Meiveli. All Rights Reserved.