• Sunday, April 19, 2026

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli

நாடாளுமன்றத்தில் அனைவரும் கொள்ளையர்கள், வீட்டுக்கு அனுப்புவோம்’ அருட்தந்தை சத்திவேல்

By Admin On Sep 8, 2022
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
VIDEO NEWS

தற்போதைய நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைவரும் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்தி பொது சொத்துக்களை கொள்ளையடிப்பதாக தென்னிலங்கையின் சிவில் சமூக செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுவதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளருமான அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் தேர்தலில் வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் தென்னிலங்கை மக்களுடன் இணைந்து, பொது அமைப்பினை உருவாக்கி தற்போதைய நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களையும் வீட்டுக்கு அனுப்பும் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக அவர் இன்று கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் வலியுறுத்தியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

Catchup shows

நாங்கள் இந்த முறைமையை மாற்றுமாரு கோரிக்கை விடுக்கின்றோம். முறைமை மாற்றம் எனப்படுவது வடக்கு, கிழக்கு மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு அரசியல் மாற்றம் வரவேண்டும். அரசியல் யாப்பில் மாற்றம் வரவேண்டும். இதற்கு நாங்கள் மக்களை தயார்படுத்துவோம். இதற்கென மக்களை தெளிவுபடுத்தி அரசியல் ரீதியாக சிந்திக்கக்கூடிய அமைப்பு ஒன்றை நாம் கட்டியெழுப்புவோம். அந்த மக்கள் அமைப்புடனேயே நாம் முன்னோக்கிச் செல்வோம். அவர்களுடன் இணைந்து இவர்களை எவ்வாறு விரட்டியடிப்பது என்பது தொடர்பில் நாம் செயற்பாடுகளை முன்னெடுப்போம். இன்று நாடாளுமன்றத்தில் இருக்கக்கூடிய அனைத்து உறுப்பினர்களும் பொது மக்களின் சொத்தை கொள்ளையடித்தவர்கள். இந்த கொள்ளை ஆட்சியாளர்களை எவ்வாறு விரட்டுவது என்பது  தொடர்பில் ஜனநாயக ரீதியிலான தீர்மானத்தை மேற்கொள்வோம். அந்த ஜனநாயகத்தை இவர்கள் புரிந்துகொள்ளமாட்டார்கள். இந்த ஜனநாயகத்தின் அடிப்பைடையிலேயே இவர்கள் கொள்ளைகளில் ஈடுபடுகின்றனர். ஆகவே நாங்கள் மதிக்கின்ற ஜனநாயகம் வேறு, அவர்கள் நினைக்கும் ஜனநாயகம் வேறு. எனினும் எங்களது ஜனநாயகம் மக்கள் சக்தியின் ஊடாக தேசத்துரோக ஆட்சியாளர்களை, நாடாளுமன்ற உறுப்பினர்களை அடுத்த தேர்தலில் இவர்களை வீட்டுக்கு அனுப்புவதற்கான அமைப்பு உருவாக்கத்தை வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் தென்னிலங்கை மக்களுடன் இணைந்து உருவாக்குவோம். என்றார்.

ஒருசில ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்துவிட்டு போராட்டத் தலைமைகளை கட்டுப்படுத்திவிட்டதாகத் அரசாங்கம் நினைத்துவிட்டதாகவும் எனினும் போராட்டத்திற்கான தலைமை கொள்கையை அடிப்படையாக் கொண்டது எனவும்  கொள்கைகளைகக் ஏற்றுக்கொண்டுள்ள ஆயிரக்கணக்கானவர்கள் வெளியில் இருப்பதாகவும் அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல் மேலும் தெரிவித்துள்ளார்.

Prev Post

கைதுகளின் பின்னணியில் மொட்டுக் கட்சி, ஜோசப் ஸ்டாலின் குற்றச்சாட்டு

Next Post

போராட்டக்காரர்களை அச்சுறுத்தி போராட்டத்தை நிறுத்த முடியாது’ அஜந்தா பெரேரா

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

நுவரெலியா மாநகரசபை ஏற்பாட்டில் (2026) ஏப்ரல் வசந்த காலத்தில்…

Apr 17, 2026

கள்ளக்காதல் விவகாரத்தில் தகராறு: ஒரு பிள்ளையின் தாய்…

Apr 17, 2026

இலங்கை கடற்படையின் அதிரடி நடவடிக்கை: 400 கோடி பெறுமதியான…

Apr 17, 2026

வரலாற்றில் என்றுமில்லாத வகையில் அரசாங்கம் சட்ட அமுலாக்க…

Apr 17, 2026

பலாங்கொடையில் இருந்து கண்டி சென்ற கார் 300 அடி பள்ளத்தில்…

Apr 17, 2026

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல் –…

Apr 17, 2026

இலங்கை சுற்றுலாவிற்கு வலுசேர்க்கும் வகையில் மலேசியாவின்…

Apr 17, 2026

யாழ் இந்து மகளிர் கல்லூரி ஆவணப்படுத்தல்

Apr 16, 2026

சித்திரை புத்தாண்டு பருவகாலத்தில் இலங்கை போக்குவரத்துச் சபை…

Apr 16, 2026

கொழும்பில் வழமைக்குத் திரும்பும் பேருந்து மற்றும் ரயில்…

Apr 16, 2026
Prev Next 1 of 112
Facebook
© 2026 - Meiveli. All Rights Reserved.