• Sunday, June 22, 2025

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli

ரணில் அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு விரிவுரையாளர்கள் கடும் எதிர்ப்பு

- வீடியோ இணைப்பு -

By Admin Last updated Sep 7, 2022
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
VIDEO NEWS

 

பயங்கரவத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முன்னெடுக்கும் அடக்குமுறைகளுக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

முதிர்ச்சியடைந்த அரசியல்வாதி என்ற வகையில் நியாயமாக செயற்படுமாறு கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஜனாதிபதியை தெரிவித்துள்ள திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி மஹிம் மெண்டிஸ் ஜனநாயகப் போராட்டங்களை அடக்குவதையும், போராட்டக்காரர்களை கைது செய்வதையும் நிறுத்துமாறு வலியுறுத்தியுள்ளார்.

Catchup shows

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நீங்கள் சரியாக செயற்படவில்லை எனின், இந்த நாட்டிற்கு தெரிவிக்கப்படும் முன்னுதாரணம் என்ன? கடந்த சில தசாப்தங்களாக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நீங்கள் கடந்த தேர்தலில் மாத்திரமே தோல்விடையந்தீர்கள். அவ்வாறான நீங்கள் முதிர்ச்சியுடனும், முன்னுதாரணமாகவும் செயற்பட வேண்டும் என்பதை நாம் தெரிவிக்கின்றோம். நல்லாட்சி அரசாங்கத்தில் உங்களை பிரதமராக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள் என்ற அடிப்படையில், தெரிவிக்கின்றோம் நீங்கள் இவ்வாறு செயற்படுவதை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஜீவந்தர, வசந்த முதலிகே, சிறிதம்ம தேரர் உள்ளிட்டவர்கள் வளர்ச்சியடைந்த இளைஞர் சமுதாயத்தின பிரதிநிதிகளே. அவர்கள் ஜனநாயகத்தை செயற்பாடுகள் மற்றும் அனுகுமுறைகளை மதிக்கும், நிராயுதபானிகளான மக்களையே அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்கள். அவர்கள் எமது பல்கலைக்கழ மாணவர்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். தவறான மனிதராக நீங்கள் வரலாற்றில் இடம்பிடிக்கவேண்டிய அவசியமில்லை. இந்த அடக்குமுறையை நிறுத்துமாறு நாங்கள் மக்கள் சார்பில் உங்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். என்றார்.

இலங்கையில் இடம்பெறும் மக்கள் சார்பு ஜனநாயகப் போராட்டங்களில் முன்னிற்கும் இளைஞர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கட்டுப்படுத்த முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி மஹிம் மெண்டிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

Prev Post

ரணில் ஆட்சியின் அடக்குமுறை குறித்து ஜேடிஎஸ் ஐ.நாவிற்கு அறிக்கை

Next Post

தமிழ் ஆர்வலர்கள் மீதான அடக்குமுறை தொடர்கிறது – வீடியோ இணைப்பு

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்க மற்றும் சுவிஸ் நாடுகளின்…

May 20, 2025

தமிழ் டயஸ்போராவுக்கு அரச தரப்பில் ஆதரவு? – சரத்…

May 20, 2025

இனப்படுகொலையை அங்கீகரிக்கவும் மேலும் தடைகளை விதிக்கவும்…

May 20, 2025

ஊடகத் துறையுடன் தொடர்புடைய 21 அமைப்புகளின் பிரதிநிதிகளுடன்…

May 16, 2025

காணி சுவீகரிப்பைத் தடுக்க சர்வதேசத்தின் தலையீட்டைக் கோரியது…

May 15, 2025

கனடாவில் வாழும் விடுதலை புலிகள் ஆதரவாளர்களுக்கு…

May 15, 2025

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தின் செய்தியை சர்வதேச…

May 15, 2025

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அரசாங்கத்திற்கு ஒரு சிவப்பு…

May 12, 2025

அரசுக்கு எதிராக ஆட்சியை அமைப்பதற்கு நிபந்தனையின்றி ஆதரவு…

May 12, 2025

பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களின் நிலையைப் பார்வையிட…

May 12, 2025
Prev Next 1 of 419
Facebook
© 2025 - Meiveli. All Rights Reserved.