கோட்டாபய தாய்லாந்துக்குள் நுழைவதற்கான அனுமதியை வழங்க, இலங்கை அரசே கோரிக்கை: தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சு உறுதி

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளைய தினம் தாய்லாந்து செல்லவுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சிக்கப்பூரில் தற்போது தங்கியுள்ள கோட்டாபய, அவருக்கு வழங்கப்பட்ட விசா காலம் முடிவடையவுள்ள நிலையில், தற்போது சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்து செல்லும் அவர், அங்கு சிறிது காலம் தங்கியிருக்க வாய்ப்புள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு தாய்லாந்துக்குள் நுழைவதற்கான அனுமதியை வழங்குமாறு, இலங்கை அரசே கோரிக்கை விடுத்ததென, தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

இரண்டு நாடுகளுக்குமிடையிலான நீண்டகால உறவை கருத்தில்கொண்டு இந்த கோரிக்கை குறித்து ஆராய்வதாக தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சின் அதிகாரியொருவர் தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராஜதந்திர உரிமம் இருப்பதால் முன்ன்ள் ஜனாதிபதிக்கு வீசாவுடன் 90 நாட்கள் தாய்லாந்தில் தங்கியிருக்கவும் 2013ஆம் ஆண்டு தாய்லாந்து மற்றும் இலங்கைக்கு இடையில் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய, அனுமதி வழங்கப்படவுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.எனினும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இதுவரை எவ்வித அரசியல் அடைக்கலம்  கோரிவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கோட்டாபய ராஜபக்ஸ நாளைய தினம் தாய்லாந்து நோக்கி செல்லவுள்ளார் என ரொய்டர் செய்தி சேவை செய்தி வெளியிட்டுள்ளது.