உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்க பிரான்ஸ் ஜேர்மனி போலந்து உறுதி

உக்ரைன் கடந்த சில நாட்களுக்காக ரஷியாவுக்கு எதிராக பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. பல முனைகளில் இருந்து தாக்குதல் நடத்துவால் ரஷியப் படைகள் சில இடங்களில் திணறி வருகிறது. இதனால் ஏழு கிராமங்களை மீண்டும் கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நேற்று உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவது மற்றும் ஜூலை மாதம் நடைபெற இருக்கும் நேட்டோ மாநாடு குறித்து ஆலோசனை நடத்த பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் போலந்து அதிபர்கள் கலந்து கொண்டு பேசினர். மூன்று தலைவர்களின் சந்திப்பு உக்ரைனுக்கு ஆதரவு என்பதை உறுதியளித்தது.