• Thursday, July 2, 2026

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli

பயங்கரவாத தடைச் சட்டம் பயங்கரவாதத்தை உருவாக்கும் சட்டமாக மாறியுள்ளது

By Admin Last updated Sep 22, 2022
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
VIDEO NEWS

இலங்கையில் பயங்கரவாதத்தை தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டம் இன்று பயங்கரவாதத்தை உருவாக்கும் சட்டமாக மாறியுள்ளதாக இலங்கையின் முன்னணி  வைத்திய தொழிற்சங்கத் தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நோயாளிகள் மருந்துகளுக்காகவும், விவசாயிகள் பசளைக்காகவும் வீதியில் இறங்கிப் போராடினால் அவர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யும் நடவடிக்கை இலங்கை அரசாங்கத்தால் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக சுகாதார நிபுணர்கள் கூட்டமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

தற்போதைய ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் ஜனநாயக போராட்டங்களை முன்னெடுக்கும் நாட்டு மக்களை தீவிரவாதிகளாகவே அடையாளப்படுத்தியுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Catchup shows

அவர் மேலும் தெரிவிக்கையில்,

விசேடமாக இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களும் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தைப் பொறுத்தவரை தீவிரவாதிகள். நாங்கள் மின்கட்டணம் அதிகம் என தெரிவித்து வீதிக்கு இறங்கினால் தீவிரவாதிகளாக மாறி சிறையில் அடைக்கப்படுவோம். நாளை மருந்துகள் இல்லையெனத் தெரிவித்து அதனை கோரினால் அரசாங்கம் எம்மை தீவிரவாதிகள் எனத் தெரிவிக்கும், விவசாயிகள் உரத்தைக் கேட்டு போராட்டம் நடத்தினால் அவர்களும் சிறையில் அடைக்கப்படுவார்கள். ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை செயற்படுத்துகின்ற அதேவேளை, இந்த நாட்டில் தீவிரவாதிகள் யார் என்பதற்கு புதிய அர்த்தம் ஒன்றையும் தந்துள்ளது. அதாவது அரசாங்கம் முன்னெடுக்கும் ஊழல் நிறைந்த பொறுப்பற்ற செயற்பாடுகளுக்கு எதிரான எவரும் அவர்களின் அர்த்தப்படுத்தலுக்கு அமைய தீவிரவாதிகள். இந்த நாட்டின் அனைத்து மக்களும் தீவிரவாதிகள் ஆனால் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அவரது குழு தீவிரவாதிகள் அல்ல, ஆகவே பயங்கரவாதம் இல்லாத பயங்கரவாத தடைச் சட்டத்தினுள் பயங்கரவாதத்தை தடுப்பதற்கு பதிலாக பயங்கரவாதிகளை உருவாக்குகின்றனர். ஆகவே இது பயங்கரவாத தடைச் சட்டம் என்பதற்கு பதிலாக பயங்கரவாதிகளை உருவாக்கும் சட்டம் என அர்த்தப்படுத்திக்கொள்வதே சரியானதாக அமையும். என்றார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஊடாக பயங்கரவாதத்தை உருவாக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை தடுத்து நிறுத்தாவிடின் இலங்கையின் அனைத்து மக்களும் தீவிரவாதிகளாக மாற்றமடைய வேண்டிய சூழல் ஏற்படும் என சுகாதார நிபுணர்கள் கூட்டமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ் மேலும் தெரிவித்துள்ளார்.

Prev Post

ரணில் ராஜபக்ச அரசாங்கம் கல்வி தொடர்பில் இதுவரையில் இருந்து வந்த உரிமைகளை திட்டமிட்டு இல்லாது செய்கிறது

Next Post

மன்னாரில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத கனிய வள அகழ்வு

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

“வளமான நாடல்ல; வளமான அரசாங்கத்தையே திசைகாட்டி…

Jul 1, 2026

இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் அதிகரிப்பு மற்றும்…

Jun 30, 2026

ஹரக் கட்டாவின் மனைவியிடம் லஞ்சம் பெற்ற விவகாரம்: மூன்று…

Jun 30, 2026

தவறை ஒப்புக்கொண்டார் ‘மிஸ்டர் கொத்து’ அதிபர்…

Jun 30, 2026

அரசாங்கத்தின் தவறான கொள்கைகளால் விவசாயிகள், தொழிலதிபர்கள்…

Jun 30, 2026

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய நெருக்கடிக்கு சமரசமே…

Jun 30, 2026

“அரசாங்க ஊழியர்களை அவமதிக்கும் தற்போதைய ஆட்சி” –…

Jun 30, 2026

இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டின் கேத் ஆய்வகங்களின் (Cath…

Jun 30, 2026

கொழும்பு கொம்பனித்தெரு முருகன் ஆலய பக்தர்களின் ஏற்பாட்டில்…

Jun 29, 2026

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி‘! திரையரங்குகளில்…

Jun 29, 2026
Prev Next 1 of 172
Facebook
© 2026 - Meiveli. All Rights Reserved.