• Saturday, June 14, 2025

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli

பயங்கரவாத தடைச் சட்டம் பயங்கரவாதத்தை உருவாக்கும் சட்டமாக மாறியுள்ளது

By Admin Last updated Sep 22, 2022
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
VIDEO NEWS

இலங்கையில் பயங்கரவாதத்தை தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டம் இன்று பயங்கரவாதத்தை உருவாக்கும் சட்டமாக மாறியுள்ளதாக இலங்கையின் முன்னணி  வைத்திய தொழிற்சங்கத் தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நோயாளிகள் மருந்துகளுக்காகவும், விவசாயிகள் பசளைக்காகவும் வீதியில் இறங்கிப் போராடினால் அவர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யும் நடவடிக்கை இலங்கை அரசாங்கத்தால் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக சுகாதார நிபுணர்கள் கூட்டமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

தற்போதைய ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் ஜனநாயக போராட்டங்களை முன்னெடுக்கும் நாட்டு மக்களை தீவிரவாதிகளாகவே அடையாளப்படுத்தியுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Catchup shows

அவர் மேலும் தெரிவிக்கையில்,

விசேடமாக இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களும் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தைப் பொறுத்தவரை தீவிரவாதிகள். நாங்கள் மின்கட்டணம் அதிகம் என தெரிவித்து வீதிக்கு இறங்கினால் தீவிரவாதிகளாக மாறி சிறையில் அடைக்கப்படுவோம். நாளை மருந்துகள் இல்லையெனத் தெரிவித்து அதனை கோரினால் அரசாங்கம் எம்மை தீவிரவாதிகள் எனத் தெரிவிக்கும், விவசாயிகள் உரத்தைக் கேட்டு போராட்டம் நடத்தினால் அவர்களும் சிறையில் அடைக்கப்படுவார்கள். ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை செயற்படுத்துகின்ற அதேவேளை, இந்த நாட்டில் தீவிரவாதிகள் யார் என்பதற்கு புதிய அர்த்தம் ஒன்றையும் தந்துள்ளது. அதாவது அரசாங்கம் முன்னெடுக்கும் ஊழல் நிறைந்த பொறுப்பற்ற செயற்பாடுகளுக்கு எதிரான எவரும் அவர்களின் அர்த்தப்படுத்தலுக்கு அமைய தீவிரவாதிகள். இந்த நாட்டின் அனைத்து மக்களும் தீவிரவாதிகள் ஆனால் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அவரது குழு தீவிரவாதிகள் அல்ல, ஆகவே பயங்கரவாதம் இல்லாத பயங்கரவாத தடைச் சட்டத்தினுள் பயங்கரவாதத்தை தடுப்பதற்கு பதிலாக பயங்கரவாதிகளை உருவாக்குகின்றனர். ஆகவே இது பயங்கரவாத தடைச் சட்டம் என்பதற்கு பதிலாக பயங்கரவாதிகளை உருவாக்கும் சட்டம் என அர்த்தப்படுத்திக்கொள்வதே சரியானதாக அமையும். என்றார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஊடாக பயங்கரவாதத்தை உருவாக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை தடுத்து நிறுத்தாவிடின் இலங்கையின் அனைத்து மக்களும் தீவிரவாதிகளாக மாற்றமடைய வேண்டிய சூழல் ஏற்படும் என சுகாதார நிபுணர்கள் கூட்டமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ் மேலும் தெரிவித்துள்ளார்.

Prev Post

எந்த நேரத்திலும் தேர்தலை நடத்தும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உள்ளது

Next Post

மன்னாரில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத கனிய வள அகழ்வு

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்க மற்றும் சுவிஸ் நாடுகளின்…

May 20, 2025

தமிழ் டயஸ்போராவுக்கு அரச தரப்பில் ஆதரவு? – சரத்…

May 20, 2025

இனப்படுகொலையை அங்கீகரிக்கவும் மேலும் தடைகளை விதிக்கவும்…

May 20, 2025

ஊடகத் துறையுடன் தொடர்புடைய 21 அமைப்புகளின் பிரதிநிதிகளுடன்…

May 16, 2025

காணி சுவீகரிப்பைத் தடுக்க சர்வதேசத்தின் தலையீட்டைக் கோரியது…

May 15, 2025

கனடாவில் வாழும் விடுதலை புலிகள் ஆதரவாளர்களுக்கு…

May 15, 2025

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தின் செய்தியை சர்வதேச…

May 15, 2025

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அரசாங்கத்திற்கு ஒரு சிவப்பு…

May 12, 2025

அரசுக்கு எதிராக ஆட்சியை அமைப்பதற்கு நிபந்தனையின்றி ஆதரவு…

May 12, 2025

பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களின் நிலையைப் பார்வையிட…

May 12, 2025
Prev Next 1 of 419
Facebook
© 2025 - Meiveli. All Rights Reserved.