• Thursday, June 11, 2026

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli

அதிக எண்ணிக்கையிலான அமைச்சர்களை நியமித்தமை தொடர்பாக ஜனாதிபதியிடம் பஃப்ரல் கேள்வி

By Admin On Sep 13, 2022
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
VIDEO NEWS

திறமையின்மை அடிப்படையில் அரச ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க முன்வந்த ஜனாதிபதி, அதிக எண்ணிக்கையிலான அமைச்சர்களை நியமிப்பதற்கு எவ்வாறு அனுமதியளித்தார் என சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாடு அமைப்பு பஃப்ரல் கேள்வி எழுப்பியுள்ளது. நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளை மகிழ்விப்பதற்கும் அரசியல் அதிகாரத்தை தக்க வைப்பதற்கும் அதிக எண்ணிக்கையிலான அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்களை நியமிப்பதால் அதிக செலவுகள் ஏற்படும் என்று தெரிவித்துள்ளது.

அமைச்சர்கள் தங்களுக்கு உரிய சம்பளத்தை மாத்திரமே ஏற்றுக்கொள்வார்கள் என அரசாங்கத்தின் பிரதம கொறடா தெரிவித்துள்ள போதும் அதனை நிறைவேற்றுவது கடினமான விடயம் என அமைச்சர்கள் பலர் தெரிவித்துள்ளதாக பஃப்ரல் சுட்டிக்காட்டியுள்ளது.அமைச்சர் ஒருவருக்கு 15க்கும் மிகாத தனிப்பட்ட அதிகாரிகள் இருக்கவேண்டும் மற்றும் ஊழியர்களுக்கு 6 வாகனங்களும் ஒவ்வொரு வாகனத்துக்கும் 600 லீற்றர் டீசல், 750 லீற்றர் பெற்றோல் என்பன வழங்கப்படும் என்று ஜனாதிபதியின் செயலாளர் சுற்றறிக்கை விடுத்துள்ளார்.

Catchup shows

குறித்த சுற்றறிக்கை மூலம் அமைச்சர் மற்றும் ஊழியர்களின் தொடர்பாடல் செலவை அரசாங்கம் ஏற்கும் என்பதுடன், குறிப்பிட்ட அளவுக்கு அமைச்சர்களின் சிறப்புரிமைகளை மட்டுப்படுத்தியுள்ளதாக பஃப்ரல் கோடி காட்டியுள்ளது. ஊழல் குற்றவாளிகளை அமைச்சரவைக்கு நியமித்ததையும் கண்டித்துள்ள பஃப்ரல், அதன் மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்கும் செய்தி குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளது.பொது மக்கள் பிரதிநிதிகளின் செயற்திறனை அளவிடுவதற்கான அமைப்பு ஒன்றை உருவாக்குவதில் கவனம் செலுத்துமாறு அந்த அமைப்பு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Prev Post

ஐநாவில் இலங்கைக்கு ஆதரவு தெரிவித்தது சீனா

Next Post

மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் புதிய அரசியல் கூட்டணி: நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழி அகழ்வின் 22வது நாளான…

Jun 11, 2026

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரியும், கலைஞர் சங்கீதனை…

Jun 10, 2026

 சுரேஷ் சலேவுக்கு ஆதரவான சத்தியாக்கிரகப் போராட்டம்…

Jun 10, 2026

சமுர்த்தியை விற்கவோ அல்லது துண்டுபோடவோ எந்த ஆயத்தமும் இல்லை:…

Jun 10, 2026

திறமையற்ற நிர்வாகத்தால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி:…

Jun 10, 2026

சுரேஷ் சலேவிற்கு ஆதரவான சத்தியாக்கிரகப் போராட்டம் 3வது…

Jun 10, 2026

உலக வங்கி பிரதிநிதிகளுடன் வடிவேல் சுரேஷ் கலந்துரையாடல்,…

Jun 9, 2026

ஐக்கிய தேசியக் கட்சி பெண் நகராட்சிமன்ற உறுப்பினருக்கு எதிராக…

Jun 9, 2026

‘திட்வா’ சூறாவளியினால் சேதமடைந்த பாடசாலைகளின்…

Jun 9, 2026

செம்மணி மனிதப் புதைகுழியின் இன்றைய (09) அகழ்வின் போது,…

Jun 9, 2026
Prev Next 1 of 159
Facebook
© 2026 - Meiveli. All Rights Reserved.