• Sunday, March 15, 2026

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli

அரச பயங்கரவாதத்திற்கு எதிராக கிளர்ந்தெழ வேண்டும் – சுதேஷ் நந்திமால்

By Admin Last updated Sep 12, 2022
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
VIDEO NEWS

அமைதிப் போராட்டத்தில் ஈடுபடும்  மக்களை ஒடுக்கும் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக மக்கள்  கிளர்ந்தெழ வேண்டுமென தென்னிலங்கையின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் செயலாளர் சுதேஷ் நந்திமால், ஜனநாயக போராட்டக்காரர்கள் மீது அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

Catchup shows

இன்று மக்கள் ஆணைக்கு அப்பால் சென்று  அரச பயங்கரவாதம் செயற்படுகின்றது. இராணுவத்தை பயன்படுத்தி தடிகளை எடுத்துக்கொண்டு, மக்களின் அமைதியான ஆர்ப்பாட்டத்தை, மக்களின் ஜனநாயக உரிமையை இராணுவத்தை அனுப்பி தாக்குதல் நடத்துகின்றார்கள். ஆகவே யார் இந்த நாட்டில் தீவிரவாதி? ஊழலுடனான இந்த ஆட்சிக்கு எதிரான இளைஞர் யுவதிகளா? இல்லாவிடின் ரணில் விக்ரமசிங்க, மொட்டுக் கட்சி இணைந்த இந்த அரசாங்கமா? இதனை மக்கள் புரிந்துகொள்ள முடியுமா? ரணில் விக்ரமசிங்க பல கனவுகளை இந்த மக்களுக்கு வழங்குகின்றார் எனினும் அதில் ஒன்றுமே பலிக்காது. அனைத்து பொய்யான வாக்குறுதிகளையும் வழங்கி, தமது ஜனாதிபதி ஆசனத்தை காப்பாற்றி மீண்டும் ராஜபக்சவின் புதல்வருக்கு இந்த பதவியை வழங்கும் நோக்கத்தை நோக்கி அவர் பயணிக்கின்றார். பொறுத்தது போதும் மேலும் தாமப்படுத்த வேண்டாம். என்றார்.

ஜனநாயக ரீதியில் போராடும் மக்கள் மீது ஆயுதப் படைகளை கொண்டு தாக்குதல் நடத்தும் அரசாங்கமும், அதிகாரிகளுமே பயங்கரவாதிகள் என கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் செயலாளர் சுதேஷ் நந்திமால் மேலும் தெரிவித்துள்ளார்.

Prev Post

8 மாதங்களில் 500 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்

Next Post

‘இலங்கை மீதான சர்வதேச அழுத்தத்தை தடுக்க முடியாது’  அருட்தந்தை ரொஹான் சில்வா

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

ரஜினி குறித்து ஆதவ் அர்ஜுனா பேச்சு… திருமாவளவன்…

Mar 13, 2026

‘இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை…

Mar 13, 2026

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான இந்திய செய்மதித் தொலைக்காட்சி…

Mar 13, 2026

மலையகத் தமிழர்கள் ஒரு தேசிய இனம்: வெறும் தொழிலாளர் சமூகமாக…

Mar 13, 2026

கிவுல் ஓயா திட்டம் தொடர்பில்  வவுனியா  அபிவிருத்திக் குழு…

Mar 13, 2026

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்துவதற்கு…

Mar 13, 2026

 இந்தியப் பெருங்கடல் பிராந்திய நாடுகளின் தலைவர்களுடன் இலங்கை…

Mar 13, 2026

இலங்கைக்கான ரஷ்ய தூதுவருடன் அமைச்சர் விஜித ஹேரத் அவசர…

Mar 13, 2026

டித்வா சூறாவளியின் அரசின் தொடர் நடவடிக்கை தொடர்பாக…

Mar 12, 2026

அரசாங்கம் கறுப்புச்சந்தை வியாபாரி போல் செயற்படுகிறது:…

Mar 12, 2026
Prev Next 1 of 82
Facebook
© 2026 - Meiveli. All Rights Reserved.