• Friday, November 14, 2025

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli

அமைதி ஆர்ப்பாட்டத்தில் வன்முறையை புகுத்திய முன்னிலை சோஷலிசக் கட்சி, ஜனாதிபதி குற்றச்சாட்டு

- வீடியோ இணைப்பு -

By Admin Last updated Sep 7, 2022
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
VIDEO NEWS

ஆட்சிக்கு வந்ததில் இருந்து செயற்பாட்டாளர்களுக்கு எதிராக தொடர்ந்து அடக்குமுறைகளை முன்னெடுத்த ஜனாதிபதி, தற்போது அரசாங்கத்திற்கு எதிரான கட்சியொன்றை இலக்கு வைப்பதன் நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளதோடு,  முன்னிலை சோசலிசக் கட்சி வன்முறைச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

குறித்த கட்சியின் தாய்க் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியை பெரும் அச்சத்துடன் அழித்த அரசாங்கத்தில் அதிகாரமிக்க அமைச்சுப் பதவியை வகித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் 76ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வில் எவ்வித ஆதாரமும் முன்வைக்கப்படாமல் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொள்கை ரீதியிலான அரசியலை, நவீன அரசியலை பொது மக்கள் எதிர்பார்த்தனர் எனினும் நாம் எவரும் அதனை பின்பற்றவில்லை. இறுதியில் அழுத்தம் அதிகரித்தமையால் இளைஞர் யுவதிகள் ஏப்ரல் மாதம் போராட்டத்தை ஆரம்பித்தனர். அது அமைதியான ஆர்ப்பாட்டம். அவர்கள் தமது திறன்களை வெளிப்படுத்தினர்.  அவர்களது இயலுமையை வெளிப்படுத்தினர். அவர்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். இதற்கு நாம் இணங்கினாலும், இணங்காவிடினும் அதனை நாம் மதித்தோம். முதன் முறையாக இளைஞர்கள் ஆயுதம் ஏந்தாமல், குண்டுகளை கையில் எடுக்காமல் நாட்டில் மாற்றம் ஒன்று அவசியம் எனத் தெரிவித்னர். அவ்வாறு நல்லெண்ணத்துடன் தொடர்ந்து பயணிப்பது கஷ்டம். அதற்குள் விசேடமாக முன்னிலை சோஷலிசக் கட்சி வன்முறையுடன் முன்னோக்கி வந்தனர். இறுதியில் இளைஞர் யுவதிகள் வெளியேறினர். வன்முறை ஆட்சி செய்தது. ஜுலி 9 முதல் 13 வரை நாட்டின் ஆட்சியை நிறுத்தி நாடாளுமன்றத்தை கைப்பற்ற முனைந்தனர். இது தோல்வியில் முடிந்தவுடன் அதனுடன் இணைந்து போராட்டமும் நிறைவுக்கு வந்தது. போராட்டம் நிறைவடைந்தாலும், அந்த இளைஞர் யுவதிகளின் எதிர்பார்ப்பு  நிறைவடையவில்லை அது முன்னோக்கிச் செல்லும். என்றார்

1980களின் பிற்பகுதியில் ஆயுதமேந்திய கிளர்ச்சிக்கு தலைமை தாங்கிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையில் உருவாக்கப்பட்ட தேசப்பற்றுள்ள மக்கள் இயக்கத்தின் பயணத் தோழராக இருந்த மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரும் பிரதமருமான தினேஷ் குணவர்தனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் அதிதியாக ஜனாதிபதிக்கு அருகில் அமர்ந்திருந்தார்.

Catchup shows
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">

Prev Post

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!

Next Post

கைதுகளின் பின்னணியில் மொட்டுக் கட்சி, ஜோசப் ஸ்டாலின் குற்றச்சாட்டு

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

இலங்கையின் நீர்நிலைகளைச் சுத்தப்படுத்த புதிய ரோபோ இயந்திரம்!

Nov 13, 2025

இரட்டை உலக சாதனை படைத்த சாமுத்ரிகா!

Nov 13, 2025

பருத்தித்துறை – சுப்பர்மடம் கடற்பகுதி ஊடாக கேரள கஞ்சா…

Nov 3, 2025

கைப்பற்றப்பட்ட பலநாள் மீன்பிடிப் படகில் போதைப்பொருள்…

Nov 2, 2025

ஆழ்கடலில் போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் உள்ளூர்…

Nov 2, 2025

ஊடகத்தினருக்கான சிறப்பு கண் சிகிச்சை முகாம்…

Nov 1, 2025

மலேசிய கடலோர காவல்படை கப்பல் ‘KM BENDAHARA’ தீவை விட்டு…

Oct 31, 2025

நாட்டில் சட்டம் ஒழுங்கு எதிர்கொள்ளும் சவால்களுக்கு மத்தியில்…

Oct 31, 2025

இலங்கை மற்றும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் (NUS) PhD…

Oct 31, 2025

தரம் குறைந்த அரிசியை விற்பனை செய்த வியாபார நிலையங்களுக்கு…

Oct 31, 2025
Prev Next 1 of 420
Facebook
© 2025 - Meiveli. All Rights Reserved.