சிவசேனா கட்சி முக்கிய தலைவர் கைது

மும்பையில் குடிசை பகுதிகளை மாற்றும் திட்டத்தில் சுமார் 1034 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக சிவசேனா கட்சி முக்கிய தலைவர் சஞ்சய் ராவத் மீது அமலாக்கத்துறை குற்றம் சட்டி இருந்தது.இதனை அடுத்து, அவரை 8 நாள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் கோரியிருந்தது. 8 நாள் முடியாது என 4 நாட்கள் மட்டும் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தது.தற்போது அமலாக்கத்துறை விசாரணையில் சஞ்சய் ராவத் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை 4 நாட்கள் விசாரணைக்கு அமலாக்கத்துறை எடுத்துள்ளது.