இந்தியாவில் குரங்கு அம்மை நோயால் முதலாவது மரணம் பதிவு

உலகளாவிய ரீதியில் குரங்கு அம்மை தொற்று அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த 22 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார்.குறித்த இளைஞருக்கு குரங்கு அம்மை தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்ட நிலையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.இந்த நிலையிலேயே குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.