ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டி-30 ஆண்டுகளின் பின்னர் இலங்கைக்கு வெற்றி.

அவுஸ்திரேலியாவுக்கெதிராக சொந்த மண்ணில் 30 ஆண்டுகளின் பின்னர் இருதரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரொன்றில் இலங்கை வென்றுள்ளது.

ஐந்து போட்டிகள் கொண்ட அவுஸ்திரேலியாவுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் 2-1 என முன்னிலை வகித்த இலங்கை, கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் இன்று நடைபெற்ற நான்காவது போட்டியிலும் வென்று, இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கையிலேயே தொடரைக் கைப்பற்றியே மேற்கூறப்பட்டதை இலங்கை நிகழ்த்தியுள்ளது

நாணயச் சுழற்சி அவுஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பிஞ்ச் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.

இலங்கை: 258/10 (49 ஓவ. ) (துடுப்பாட்டம்: சரித் அஸலங்க 110 (106), தனஞ்சய டி சில்வா 60 (61), வனிடு ஹஸரங்க ஆ.இ 21 (20), டுனித் வெல்லலாகே 19 (35) ஓட்டங்கள். பந்துவீச்சு: பற் கமின்ஸ் 2/37 [9], மிற்செல் மார்ஷ் 2/29 [7], மத்தியூ கூனமென் 2/56 [8], கிளென் மக்ஸ்வெல் 1/49 [8]) அவுஸ்திரேலியா: 254/10 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: டேவிட் வோர்னர் 99 (112), பற் கமின்ஸ் 35 (43), ட்ரெவிஸ் ஹெட் 27 (33), மிற்செல் மார்ஷ் 26 (27) ஓட்டங்கள். பந்துவீச்சு: சாமிக கருணாரத்ன 2/19 [5], தனஞ்சய டி சில்வா 2/39 [10], ஜெஃப்ரி வன்டர்சே 2/40 [7], மகேஷ் தீக்‌ஷன 1/40 [10], வனிடு ஹஸரங்க 1/52 [10], டுனித் வெல்லலாகே 1/29 [5])

போட்டியின் நாயகன்: சரித் அஸலங்க

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இலங்கை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 2010-ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இலங்கை வெல்வது இதுவே முதல் முறையாகும். இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.