ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இலங்கை வெற்றி

இலங்கை – ஆஸ்திரேலியா இடையேயான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா வெற்றியை பெற்றதால் தொடர் 1-1 என சமனடைந்த நிலையில், இன்று 3வது ஒருநாள் போட்டி நடைபெற்றது மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியிலும் இலங்கை வென்றுள்ளது.

ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில், கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் இன்று நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 291 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில், ட்ரெவிஸ் ஹெட் ஆட்டமிழக்காமல் 70 (65), ஆரோன் பின்ஞ் 62 (85), அலெக்ஸ் காரி 49 (52), கிளென் மக்ஸ்வெல் 33 (18) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஜெஃப்ரி வன்டர்சே 3, டுனித் வெல்லலாகே 1, தனஞ்சய டி சில்வா 1, துஷ்மந்த சமீர 1 விக்கெட்டைக் கைப்பற்றியிருந்தனர்.

பதிலுக்கு 292 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை, பதும் நிஸங்கவின் 137 (147), குசல் மென்டிஸின் 87 (85) ஓட்டங்களோடு 48.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில், ஜஹை றிச்சர்ட்ஸன் 2, ஜொஷ் ஹேசில்வூட் 1, கிளென் மக்ஸ்வெல் 1 விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக பதும் நிஸங்க தெரிவானார்.