எலும்புத் துண்டுகளுக்காகத் தமிழினத்தைக் காட்டிக்கொடுத்தவர்களுக்கு தார்ப்பரியம் புரியாது: புளொட் தலைவர் சித்தர்த்தன் மீது  சுகாஷ் காட்டம்


அரசு வீசிய எலும்புத் துண்டுகளுக்காகத் தமிழினத்தைக் காட்டிக்கொடுத்த உங்களுக்கு இவற்றின் தார்ப்பரியம் புரியாது என புளொட் தலைவர் சித்தர்த்தனுக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் சுகாஷ் பதிலடி கொடுத்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதன் மூலம் யாரை வெல்ல வைக்கப் போகின்றீர்கள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரிடம் புளொட் தலைவர் சித்தார்த்தன் கேள்வி எழுப்பியிருந்த நிலையில் இதற்கு பதிலளிக்கையிலேயே சுகாஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  மேலும் அரச கூலிகளாகச் செயற்பட்டுச் சொந்த மக்களையே சூறையாடி, இறுதிக்கட்ட யுத்தம் நடந்தபோது ‘யுத்தத்தை நிறுத்தினால் புலிகளுக்கு ஒட்சிசன் கொடுத்தது போலாகிவிடும்’ என்று கூறி, அரசு வீசிய எலும்புத் துண்டுகளுக்காகத் தமிழினத்தைக் காட்டிக்கொடுத்த உங்களுக்கு இவற்றின் தார்ப்பரியம் புரியாது என தெரிவித்தார்.