அருட் தந்தை சிறில் காமினிக்கு சி.ஐ.டி அழைப்பு

அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ மீண்டும் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மைகளை விசாரிப்பதற்காகவே அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, ஏப்ரல் 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு குற்றப்  புலனாய்வுப் பிரிவுக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.