வெள்ளவத்தையில், லண்டன் கோடீஸ்வர வர்த்தகரின் தற்கொலை முயற்சியின் பின்னணியில் திடுக்கிடும் தகவல்கள்.

லண்டனில் கோடீஸ்வர வர்த்தகராக உள்ள 51 வயதான தமிழர் வெள்ளவத்தைப் பகுதியில் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவருகின்நிலையில்  குறித்த வர்த்தகh 4 தடவைக்கு மேல் லண்டனிலிருந்து 12 கோடி ரூபாக்களுக்கும் அதிகமான மதிப்பான பவுண்ஸ்களை மாற்றியுள்ள நிலையில் அவரின் தற்கொலை முயற்சிக்கான திடுக்கும் காரணங்கள் வெளியாகியுள்ள்ன.

வர்த்தகர் கடந்த சனிக்கிழமை வீட்டில் தங்கியிருந்த நேரத்தில் அங்கு 13 வயது மதிக்கத்தக்க சிறுமியும் நடுத்தர வயதானவர்களும் வீட்டுக்குள் சென்று வந்துள்ளது சிசிரிவி கமரா மூலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த வர்த்தகருக்கு நெருக்கமான வட்டாரங்களின் தகவல்களின்படி  வர்த்தகரின் வீட்டுப்பாதுகாவலரிடம் விசாரணை மேற்கொண்ட போது கடந்த ஜனவரி மாத முற்பகுதியில் வர்த்தகரிடம் இருதடவைகள் சிறுமி ஒருவருடன் ஆட்டோவில் ஒருவர் வந்து இரவு தங்கிச் சென்றுள்ளார்.

தான் குறித்த சிறுமியின் தந்தை என்றும் வர்த்தகரின் நண்பன் என்றுமே பாதுகாவலரிடம் குறித்த நபர் கூறியுள்ளார். அவர்கள் வந்து சென்ற இரு நாட்களின் பின்னர் வர்த்தகர் கடும் உழைச்சலில் காணப்பட்டதாகவும் பாதுகாவலர் கூறியுள்ளார். சிறுமியுடன் உறவு கொள்ளச் செய்து வர்த்தகரை அச்சுறுத்தி பல கோடி ரூபாக்களை சிலர் கப்பமாக பெற்றிருக்கலாம் என அவருக்கு நெருக்கமானவர்கள் சந்தேகிக்கின்றனர்.

இதேவேளை இலங்கையில் வர்த்தகர்கள் மற்றும் பணக்காரபுள்ளிகளை குறி வைத்து, அவர்களின் பாலியல் பலவீனங்களை பயன்படுத்தி,  15 வயதுக்கும் குறைவான சிறுமிகளை அவர்களுடன் உறவுக்கு அனுப்பி, அதன் பின்னர் வயது குறைந்த சிறுமியுடன் உறவு கொண்டதாக கூறி அச்சுறுத்தி, பல வருடங்கள் சிறைத் தண்டனை கிடைக்கும் என கூறி, கோடிக்கணக்கில் பணம் பெற்றுவரும் சம்பவங்கள் நடப்பதாக தெரியவருகின்றது. இதற்கு சில பொலிஸ் அதிகாரத்தரப்பினரும் உறுதுணையாக நிற்பதாகவும் சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.