நானுஓயா கிளாரண்டன் தோட்டத்தில் முருகன் ஆலயத்தில் பங்குனி உத்திர திருவிழா.

நானுஓயா நிருபர்

நானுஓயா கிளாரண்டன் தோட்டத்தில் முருகன் ஆலயத்தில் பங்குனி உத்திர திருவிழா- பக்தர்கள் பறவை காவடி, அலகு குத்தி தரிசனம்.

முருகக் கடவுளின் விழாக்களில் பங்குனி உத்திரம் திருவிழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது அதன் அடிப்படையில் (24) ஞாயிற்றுக்கிழமை நானுஓயா கிளாரண்டன் கீழ் பிரிவில் பங்குனி உற்சவ விழா கோலாகலமாக நடைபெற்றது.

தொடர்ந்து பாற்குட பவனி, பறவைக்காவடி, தீ மிதிப்பு நடைபெற்று ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு விஷேட அபிஷேகத்துடன் முருகப்பெருமானக்கு பூஜைகள் இடம்பெற்றதை படங்களில் காணலாம்.