இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நிர்வாகத் தெரிவு தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நிர்வாகத் தெரிவு தொடர்பான வழக்கு இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றில் விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் வழக்கு மே மாதம் 31 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணையின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளைத் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா இதனை குறிப்பிட்டுள்ளார். இவ்வழக்கிற்கு ஏழு எதிராளிகள் பெயரிடப்பட்டுள்ள நிலையில் இரண்டாம் மற்றும் நான்காம் எதிராளிகளான தலைவராக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், செயலாளராக தெரிவாகிய ச.குகதாசன் ஆகியோர்களுக்கு சார்பில் முன்னிலையானேன். சுமார் மூன்று மணி நேரங்கள் இவ்வழக்கு விவாதிக்கப்பட்டு சமர்ப்பணம் செய்யப்பட்டது. கடந்த பெப்ரவரி 15 ஆம் திகதி வழகு தாக்கல் செய்யப்பட்டு 29 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கு பொதுநலன் கருதி முடிவுக்கு கொண்டு வரவேண்டும், கட்சி யாப்பை மீறியதாக இங்கு எதுவும் சொல்லப்படவில்லை, குறிப்பாக சில விதிகள் மேலதிகமாக சேர்க்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் வழக்கு தொடர்ந்தால் அதனை வெற்றி கொள்ளலாம், ஆனால் காலம் செல்லும், காலம் சென்ற நிலையில் வெற்றி கொண்டால் அது தோல்வியாகவே கருதப்படும் .வழக்காளி கோரும் நிவாரணத்தை வழங்க தயாராக இருக்கிறோம். எங்களுடைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, இதனை வழக்காளி தனது சட்டத்தரணி ஊடாக தெரிவிக்க வேண்டும்.வழக்கை மீளப் பெற வேண்டும் என எனது வாதத்தை நீதிமன்றில் தெரிவித்தேன்’ என்றார்.