நுவரெலியாவில் வசந்த கால விழாவிக்கு பாடசாலை மாணவர்கள் பேண்ட் வாத்திய ஒத்திகை இன்று .

செ.திவாகரன்

நுவரெலியாவில் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் பூராகவும் நுவரெலியா நகரை மையப்படுத்தி இடம்பெறும்.

இவ்வருடமும் எதிர் வரும் முதலாம் திகதி உத்தியோகபூர்வமாக விழாக்கோலத்துடன் வசந்த கால நிகழ்வுகள் ஆரம்பமாக உள்ளது .

இதன் முதல் நாள் பாடசாலை மாணவர்களின் பேண்ட் வாத்திய குழுவினரின் வாத்தியத்துடன் இவ்விழா அங்குரார்ப்பணம் செய்வது வழக்கம் இதன் காரணமாக இன்று நுவரெலியாவில் உள்ள 10 இற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவ குழுக்களின் பேண்ட் வாத்திய அணிவகுப்பு ஒத்திகை நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் நடைபெற்று விக்டோரியா பூங்கா நுழைவாயில் வரை சென்று நிறைவடைந்தது.

இதேவேளை ஏப்ரல் மாத சித்திரை புத்தாண்டு விடுமுறை காலத்தில் அதிகளவான உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை வரவேற்று மகிழ்விக்க சகல ஆயத்தங்களும் நுவரெலியா நகரில் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .