சிறையில் 14 தமிழ் அரசியல் கைதிகளே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.:நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு.

சிறையில் 14 தமிழ் அரசியல் கைதிகளே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

வவுனியா, வைரவபுளியங்குளம் ஆதி விநாயகர் ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்டு விசேட பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறினார்.அரசியல் கைதிகள் விடயத்தில் 5 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இன்னும் 14 அரசியல் கைதிகளே உள்ளனர்.

அவர்களுக்கு எதிராக வழக்கு விசாரணைகள் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றன.கந்தக்காடு முகாமில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அங்கு புனர்வாழ்வு பெறுபவர்கள், போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் மற்றும் யுக்திய நடவடிக்கையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டவர்கள்.மூன்று பிரிவுகளாக கந்தக்காடு முகாம் இயங்கி வருகின்றது.

அங்கு இடம்பெற்ற சம்பவங்களையடுத்து அதன் நிர்வாக அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை இடமாற்றம் செய்யும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.போதைப பொருள் பாவனை அதிகரித்து வருகின்றது. அது இளம் சமுதாயத்தையும் பாதித்துள்ளது.யுக்திய நடவடிக்கை மூலம் போதைப்பொருள் விற்பனை மற்றும் போதைப்பொருள் மாபியாக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.யுக்திய நடவடிக்கையில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது’ என தெரிவித்தார்.