கம்பளையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டது.

கம்பளை பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய  யுவதியின் சடலம் இன்று தோண்டி எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (சனிக்கிழமை) கம்பளை நீதவான் முன்னிலையில், இதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த 7 ஆம் திகதி முதல் காணாமல் போனதாக கூறப்பட்ட குறித்த யுவதியை கொலை செய்யப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பில் கைதான 24 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அதன்படி குறித்த யுவதியை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்ததாக அவர் வழங்கிய வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இதற்கமைய இன்று சந்தேகநபர் அந்த சடலத்தை புதைத்த இடத்தை அடையாளம் காண்பிக்கவுள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.