சிவில் ஆர்ப்பாட்டங்களின் போது அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய விடயங்கள்.

சிவில் ஆர்ப்பாட்டங்களின் போது சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய விடயங்கள் அடங்கிய வழிகாட்டல் கோவை அண்மையில் உத்தியோகபூர்வமாக வௌியிடப்பட்டது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் இந்த வழிகாட்டல் கோவை வௌியிடப்பட்டது.

ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்னவின் தலைமைத்துவத்தின் கீழ் இந்த வழிகாட்டல் கோவை வௌியிடப்பட்டதுடன், இந்த நிகழ்வில் உயர் நீதிமன்றத்தின் அதிகாரிகள், இலங்கை விமானப் படைத் தளபதி, பொலிஸ் –  முப்படைகளின் பிரதிநிதிகள், சிரேஷ்ட அரசியல் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.