வவுனியா – குட்ஷெட் வீதியில்: தாய், தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகளின் சடலங்கள் மீட்பு

 

வவுனியா – குட்ஷெட் வீதியிலுள்ள வீடொன்றில் இருந்து தாய், தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.இந்த சடலங்கள் இன்றுகாலை கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தந்தையே இரண்டு பிள்ளைகளையும் மனைவியையும் கொலை செய்து விட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.42 வயதான தந்தையும், 36 வயதான தாயாருக்கு , 9 மற்றும் 3 வயதான மகள்களுமே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.இரண்டு குழந்தைகளின் சடலங்கள் வீட்டில் இரண்டு நாற்காலிகளிலும், மனைவியின் சடலம் படுக்கையறையிலும் கண்டெடுக்கப்பட்டது.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.