இலங்கையில் பரவும் புதிய வைரஸ் காய்ச்சல்: வைத்திசாலையில் அனுமதிக்கப்படும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு.

இலங்கையில் பரவும் புதிய வைரஸ் காய்ச்சலால் தினமும் 40 குழந்தைகள் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி மருத்துவ ஆலோசனை பெறுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த வைரஸ் காய்ச்சல் தொடர்பில் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.