போராட்டக்காரர்களுக்கு பின்னால் செயற்பட்ட சக்திகளின் இரகசியங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன:

அசாத் அலி தெரிவிப்பு

போராட்டக்காரர்களிடம் இருந்தவை அனைத்தும் திட்டமிட்ட அரசியல் என்றுமு;, அவர்களுக்கு பின்னால் நின்று செயற்பட்ட சக்திகளின் இரகசியங்கள் எல்லாம் இப்போது வெளிச்சத்துக்கு வருகின்றன என்றும் முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில்  தெரிவித்துள்ளார். மூன்று மாதங்களாக நாட்டின் நிர்வாகத்தை இயக்கும் முக்கிய அலுவலகங்களை முடக்கி போராட்டம் செய்வதை அமைதியான போராட்டம் என்று கூறிவிடமுடியாது என்றும், இந்த போராட்டக்காரர்கள் ஷங்ரிலா ஹோட்டல், கோல்பேஸ் ஹோட்டல், கிங்ஸ்பெரி ஹோட்டல், துறைமுக நகர், அதிபர் மாளிகை, அலரிமாளிகை மற்றும் அதிபர் செயலகங்களையே கைப்பற்றியமைக்கு காரணம் இருக்கினறன என தெரிவித்தார். ஜனநாயக செயற்பாடுகள், சிவில் சமூக செயற்பாடுகளுக்கு இடைஞ்சல் இல்லாதிருக்க வேண்டும், ஆனால் போராட்டக்காரர்கள் முழுக்க முழுக்க சிவில் செயற்பாடுகளை குழப்பிக்கொண்டே இருந்தனர் என்று தெரிவித்துள்ளார். மேலும், போராட்டம் செய்வது மற்றும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதெல்லாம் ஜனநாயக செயல்பாடுகளில் அடங்குபவைதான். இதற்காகத்தான், விகாரமாதேவி பூங்கா மற்றும் ஹைட்பார்க் விளையாட்டுத்திடல் போன்ற ஒதுக்குப்புறங்களை அரசாங்கம் போராட்டகாரர்களுக்காக  ஒதுக்கியுள்ளது என சுட்டிக்காட்டினார்.