எதிர்வரும் 11ம் திகதி நாடு திரும்பவுள்ளார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 11ம் திகதி நாடு திரும்பவுள்ளதாக அரசாங்க உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மக்கள் எழுச்சி போராட்டம் காரணமாக முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச இலங்கையில் இருந்து வெளியேறி சிக்கப்பூரில் தங்கியுள்ளார்.கடந்த 14ம் திகதி அதிபர் பதவியில் இருந்து விலகிய அவர் இலங்கைக்கு சேவை செய்ய காத்திருப்பதாக தனது பதவி விலகல் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கையில் இருந்து வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூர் சென்ற நிலையில் அந்நாட்டில் புகலிடம் கோரியதாக தகவல்கள் வெளியாகின.