• Friday, December 5, 2025

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli

இராஜாங்க அமைச்சர்கள் நியமனத்திற்கு தொழிற்சங்கத் தலைவர் கடும் எதிர்ப்பு

By Admin On Sep 9, 2022
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
VIDEO NEWS

நாடு பாரிய பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ள நிலையில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதிதாக 37 இராஜாங்க அமைச்சர்களை நியமித்தமைக்கு தென்னிலங்கையின் பிரபல வைத்திய தொழிற்சங்கத்தின் தலைவர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

நாட்டை நெருக்கடியில் இருந்து மீட்பதற்கு ஊடாக விஞ்ஞான ரீதியாக 18 அல்லது 20 அமைச்சர்கள் போதுமானது எனவும், முடிந்தால் இந்த மாற்றத்தை முதலில் செயற்படுத்துமாறும், வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவரும், மக்கள் பேரவையின் உறுப்பினருமான ரவி குமுதேஷ் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வலியுறுத்திளயுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

Catchup shows

சாதாரண மக்களுக்கு வரிச்சுமையை அதிகரித்துவிட்டு, குறைந்தது அத்தியாவசியமாக மக்கள் பயன்படுத்தும் மின்சாரத்திற்கேனும் நிவாரணத்தை வழங்கும் செயற்பாட்டையாவது முன்னெடுக்கத் தவறியுள்ள அரசாங்கம், அரசாங்கம் பல இராஜாங்க அமைச்சுக்களை நியமித்துள்ளது. நாங்கள் ஏற்கனவே மக்கள் பேரவை என்ற வகையில் செங்கடகல பிரகடனத்தின் ஊடாக விஞ்ஞானப் பூர்வமான 18 அல்லது அதிகபட்சமாக 20 அமைச்சுக்களையும், அவசியமெனின் மாத்திரம் 20  பிரதி அமைச்சுக்களை நியமிக்குமாறு வலியுறுத்தியிருந்தோம். இந்த சிறிய நாட்டை நிர்வகிக்க இது போதுமானது. எனினும் அரசாங்கத்திற்கு முன்னுதாரணம் என எதுவும் இல்லை. இந்த அரசாங்கம் மீண்டும் நியமனங்களை வழங்கி, சம்பளம் உள்ளிட்ட சலுகைகளை வழங்கி மக்களின் வரிச்சுமையை அதிகரிக்கின்றது. பல பணிப்பாளர்கள், ஆலோசகர்களை அரசாங்கம் நியமித்துள்ளது அவர்கள் என்ன செய்கின்றார்கள் என எவருக்கும் தெரியாது. இவ்வாறு செயற்படுகையில் நாட்டின் பொருளாதார நெருக்கடி இல்லையா? இந்த நாட்டை  நிர்வகிக்க ஊடாக விஞ்ஞானப் பூர்வமான 18 அல்லது அதிகபட்சமாக 20 அமைச்சுக்கள் போதும், அவசியமெனின் மாத்திரம் 20  பிரதி அமைச்சுக்களை போதும் முடிந்தால் முதல் நடவடிக்கையாக ஜனாதிபதி ரணில் இதனை செய்து காட்டட்டும். என்றார்.

பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட அனைத்து சுமைகளையும் பொது மக்கள் மீது சுமத்தியுள்ள அரசாங்கம் மக்களுக்கு நிவாரணத்தை வழங்குவதற்கு பதிலாக மக்களின் வரிப்பணத்தில் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களுக்கான சலுகைகளை வழங்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதாக வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Prev Post

வழக்கு விசாரணைகள் இன்றி இளைஞர்கள் தடுத்து வைப்பு’ செயற்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்பு

Next Post

பிரித்தானிய மகாராணியின் மறைவுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி: 19ஆம் திகதி தேசிய துக்க தினம்

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

வெள்ளம் குறையும் நிலைமையில் தொற்றுநோய்கள் குறித்து…

Dec 1, 2025

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக்…

Dec 1, 2025

மன்னார் இலுப்பைக்கடவை மற்றும் செட்டிகுளம் பகுதிகளில்…

Dec 1, 2025

திருகோணமலையில் புத்தர் சிலையை அகற்றுதல்: ஊடக சந்திப்பு!

Nov 17, 2025

உள்ளூர் பெரிய வெங்காய விவசாயிகளின் பிரச்சினைகளைத்…

Nov 17, 2025

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் 21ஆம் திகதிப் பேரணி…

Nov 15, 2025

உலகளாவிய தொழில்முனைவோர் வாரம் 2025 பிரதமர் தலைமையில்…

Nov 14, 2025

இலங்கையின் நீர்நிலைகளைச் சுத்தப்படுத்த புதிய ரோபோ இயந்திரம்!

Nov 13, 2025

இரட்டை உலக சாதனை படைத்த சாமுத்ரிகா!

Nov 13, 2025

பருத்தித்துறை – சுப்பர்மடம் கடற்பகுதி ஊடாக கேரள கஞ்சா…

Nov 3, 2025
Prev Next 1 of 421
Facebook
© 2025 - Meiveli. All Rights Reserved.