• Friday, December 5, 2025

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli

கைதுகளின் பின்னணியில் மொட்டுக் கட்சி, ஜோசப் ஸ்டாலின் குற்றச்சாட்டு

- வீடியோ இணைப்பு -

By Admin Last updated Sep 7, 2022
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
VIDEO NEWS

இலங்கையில் கடந்த ஜுலை மாத ஆரம்பத்தில் இடம்பெற்ற வன்முறைகளின் போது அரசியல்வாதிகளின் வீடுகள் சேதமாக்கப்பட்ட விடயத்துடன் தொடர்புடைய கைதுகளின்போது பொலிஸார் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பரிந்துரைகளுக்கு அமைய செயற்படுவதாக தென்னிலங்கையின் சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கட்சியின் அரசியல்வாதிகள் வழங்கும் பெயர்ப்பட்டியல்களுக்கு அமையவே இந்த கைது நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், அதற்கு ஆதாரமாக 2021ஆம் ஆண்டு நியமனம் பெற்ற 182 பொலிஸ் பொறுப்பதிகாரிகளை பரிந்துரை செய்தது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல்வாதிகளே எனக் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எங்களுக்குத் தெரியும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு தீ வைகத்தமை தொடர்பில் இன்று கைதுகள் இடம்பெறுகின்றன. இந்த கைதுகள் மொட்டுக் கட்சியின் முன்னாள், இன்னாள் பிரதேச சபை, மாகாண சபை உறுப்பினர்கள் வழங்கும் பெயர் பட்டியலுக்கு அமையவே இடம்பெறுகின்றது. இது மிகவும் பாரதூரமான விடயம். 2021ஆம் ஆண்டு பொலிஸுக்கு 184 பேர் பொலிஸ் பொறுப்பதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர். அவர்களில் 182 பேர் மொட்டுக் கட்சியின் பரிந்துரைக்கு அமையவே நியமிக்கப்பட்டதாக பொலிஸ்மா அதிபர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஊடாக அறிவித்திருந்தார்.  ஆகவே சில பொலிஸ் நிலையங்களில் மொட்டுக் கட்சியின் பரிந்துரைக்கு அமைய நியமிக்கப்பட்டவர்களே பணியாற்றுகின்றனர். ஆகவே மொட்டுக் கட்சியின் பரிந்துரைக்கு அமையவே கைதுகள் இடம்பெறுகின்றன. ஆகவே கைதுக்கான சாட்சியாக மொட்டுக் கட்சியின் பெயர்ப் பட்டியலே காணப்படுகின்றது. இது மிகவும் பாரதூரமான அடக்குமுறை இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. என்றார்.

இலங்கை அரசாங்கத்தின் இந்த தொடர் அடக்குமுறைகள் நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அடக்குமுறைக்கு எதிரான தமது போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.

Catchup shows
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">

Prev Post

அமைதி ஆர்ப்பாட்டத்தில் வன்முறையை புகுத்திய முன்னிலை சோஷலிசக் கட்சி, ஜனாதிபதி குற்றச்சாட்டு

Next Post

நாட்டின் அரசியலை இளம் அணியிடம் ஒப்படையுங்கள்- சாணக்கியன்

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

வெள்ளம் குறையும் நிலைமையில் தொற்றுநோய்கள் குறித்து…

Dec 1, 2025

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக்…

Dec 1, 2025

மன்னார் இலுப்பைக்கடவை மற்றும் செட்டிகுளம் பகுதிகளில்…

Dec 1, 2025

திருகோணமலையில் புத்தர் சிலையை அகற்றுதல்: ஊடக சந்திப்பு!

Nov 17, 2025

உள்ளூர் பெரிய வெங்காய விவசாயிகளின் பிரச்சினைகளைத்…

Nov 17, 2025

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் 21ஆம் திகதிப் பேரணி…

Nov 15, 2025

உலகளாவிய தொழில்முனைவோர் வாரம் 2025 பிரதமர் தலைமையில்…

Nov 14, 2025

இலங்கையின் நீர்நிலைகளைச் சுத்தப்படுத்த புதிய ரோபோ இயந்திரம்!

Nov 13, 2025

இரட்டை உலக சாதனை படைத்த சாமுத்ரிகா!

Nov 13, 2025

பருத்தித்துறை – சுப்பர்மடம் கடற்பகுதி ஊடாக கேரள கஞ்சா…

Nov 3, 2025
Prev Next 1 of 421
Facebook
© 2025 - Meiveli. All Rights Reserved.