இஸ்ரேல் இராணுவ தளங்கள் மீத ஹிஸ்புல்லா அமைப்பு ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் : மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.

 

இஸ்ரேலில் உள்ள இராணுவ தளங்களை நோக்கி லெபானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால், மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.  நேற்று இரவு இஸ்ரேல் இராணுவ தலைமையகத்தை குறிவைத்து லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

கத்யுஷா வகை ராக்கெட்டுகளை ஏவி அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியுள்ளது. லெபானில் உள்ள குழுவான ஹிஸ்புல்லா அமைப்பிற்கு ஈரான் நிதி உதவி அளித்து வருகிறது. லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள கிராமங்களை குறிவைத்து இஸ்ரேல் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாகவும் இதற்கு பதிலடியாகத்தான் 12 க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவி ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

ராக்கெட் தாக்குதலை இஸ்ரேலும் உறுதி செய்துள்ளது. இஸ்ரேல் இராணுவம் கூறுகையில், லெபனானில் இருந்து எயின் ஸெடிம் பகுதியை நோக்கி 35 க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் எந்த சேதமும் ஏற்படவில்லை. ராக்கெட் ஏவியதற்கு பதிலடியாக இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.