கொட்டக்கலையில் சொகுசுக் காரில் மின்குமிழ்கள் திருட்டு.

செ.திவாகரன் டி.சந்ரு

திம்புள்ள – பத்தன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜெயராஜன் மாவத்தை கொட்டகலை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அதி சொகுசுக் காரில் முகப்பு மின்குமிழ்கள் இரண்டு திருடப்பட்டுள்ளதாக திம்புள்ள -பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் திங்கட்கிழமை (22) அதிகாலையில் இடம்பெற்றுள்ளது எனவும் உரிமையாளரின் வீட்டுக்கு முன்பாக உள்ள மைதானம் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் குறித்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த அதி சொகுசுக் காரில் முகப்பு மின்குமிழ்கள் இரண்டும் தற்போதைய சந்தை பெறுமதி 350.000/= ரூபாய் என உரிமையாளரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக நுவரெலியா தடயவியல் பொலிஸார் மோப்ப நாய்யின் உதவியுடன்
திம்புள்ள – பத்தன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.