இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை-பிரித்தானியா பழமைவாத கட்சிக்கு ஆதரவாக தமிழ் இளையோர்

பிரித்தானியாவில் நடைபெறவுள்ள தேர்தலில், பழமைவாத கட்சிக்கு ஆதரவாக தமிழ் இளையோர் களமிறங்கியுள்ளனர்.

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என்பதை அங்கீகரிக்க வேண்டும் என்றும் இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என்ற நிபந்தனைகள் அடிப்படையிலேயே புலம்பெயர் தமிழ் இளைஞர்கள் ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர்.

இந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, (21.04.2024) பாரளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய லூயி பிரன்ச் (Hon. Louie French MP) அவர்களுக்கான பிரச்சார பணிகளை இன்பறாஜ் பத்திநாதர் மற்றும் கஜன் தவராசா தலைமையில், மரியநாயகம் வேதநாயகம், ரமணன் சிவலிங்கம், ஈஸ்வரன் டறோஷன், அஞ்சலோ நிருசன், பத்மநாதன் துலக்‌ஷன், ஜெயவீரசிங்கம் பேரானந்தம், துரைராஜா நீதிராஜா, பரணீதரன் பர்மிளன், பிரியதர்சன் கனகைிங்கம், சிவசிதம்பரம் கோகுலன், றூபன் மத்தியாஸ், ஆகியோர் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.