தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடப்படும்.

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு மதுவரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

மேலும் எதிர்வரும் மே மாதம் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையான காலப்பகுதி வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மதுபானசாலைகளை 3 நாட்களுக்கு மூடுவது தொடர்பில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க சமர்ப்பித்த யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் மே மாதம் 22,23 மற்றும் 24 ஆகிய தினங்களில் மதுபானசாலைகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.