மீனவர்கள் முன்னெடுத்திருந்த உணவு தவிர்ப்பு போராட்டம் நிறைவு

இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டை கண்டித்து யாழ் மாவட்ட மீனவர்கள் முன்னெடுத்திருந்த உணவு தவிர்ப்பு போராட்டம் நிறைவடைந்துள்ளது.கடந்த 19ஆம் திகதி காலை முதல் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை வரை யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்திற்கு முன்பாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்திருந்தனர்.

மீனவர்கள் ஒன்றிணைந்து இந்திய துணைத் தூதரகத்தை நோக்கி பேரணியாக சென்று அங்கு முற்றுகை போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழில். நான்கு நாட்களாக தொடர்ந்த உணவு தவிர்ப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது. யாழ் மாவட்ட கிராமிய கடற்தொழில் அமைப்புக்களின் சம்மேளனமும்இ யாழ் மாவட்ட கடற் தொழில் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனமும் இணைந்து கடந்த 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட உணவு தவிர்ப்பு போராட்டம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கலந்துரையாடலுக்கு பிறகு இன்று முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.