தமிழ் உட்கட்சி முரண்பாடுகள் தமிழ் மக்களை ஏமாற்றமடைய செய்துள்ளன: மன்னார் மறைமாவட்ட ஆயர் இமானுவல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவிப்பு.

தமிழர் தாயகத்தில் ஏற்பட்டுள்ள பெரும் உட்கட்சி முரண்பாடுகள் தமிழ் மக்களை ஏமாற்றமடைய செய்துள்ளன. எதிர்பார்க்கப்பட்ட பல்வேறு தேர்தல்கள் பின்தள்ளப்பட்டு வருகின்றன. இது மக்களுக்கு ஏமாற்றத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது’ என்று மன்னார் மறைமாவட்ட ஆயர் இமானுவல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.

அத்துடன், மன்னார் தீவில் முன்னெடுக்கப்படும் காற்றாலை திட்டத்தால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து நாம் அரசாங்கத்துக்கு தெரிவித்துள்ளோம். ஆயினும் அரசாங்கம் இத்திட்டத்தை கைவிடுவதாகத் தெரிய வில்லை. நாம் எமது எதிர்ப்பை பல்வேறு வழிகளில் வெளிப்படுத்துவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

கிறிஸ்தவ மக்கள் தவக்காலத்தை கடைப்பிடித்து வருகின்றனர். இதையொட்டி மன்னார் ஆயர் விடுத்த தவக்கால செய்தியிலேயே மேற்படி விடயத்தைத் தெரிவித்துள்ளார்.  மேலும்  தமிழர் தாயகத்தில் இன்று ஏற்பட்டுள்ள பெரும் உட்கட்சி முரண்பாடுகள் தமிழ் மக்களை ஏமாற்றமடையச் செய்துள்ளன என்றும் தேசிய அரசியல் கட்சிகளுக்கிடையே தொடர்ந்தும் இழுபறி நிலையே தொடர்கின்றது என்றும்  எதிர்பார்க்கப்பட்ட பல்வேறு தேர்தல்கள் பின்தள்ளப்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்த அவர் இது மக்களுக்கு ஏமாற்றத்தையும்
கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது என சுட்டிக்காட்டினார்.

ஆட்சியில் உள்ளவர்கள் தமது ஆட்சி அதிகாரத்தை தக்கவைப்பதற்கு பல்வேறு காய்நகர்த்தல்களை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். ஆகவே, இந்நிலையில் ஜனநாயக விழுமியங்கள் மதிக்கப்படவும் மக்களின் உரிமைகள் நிலைநாட்டப்படவும் தொடர்ந்து நாம் செபிப்போம். மன்னார் காற்றாலைத் திட்டம் தொடர்பாக தொடர்ந்தும் நாம் எமது எதிர்ப்பை பல்வேறு வழிகளில் வெளிப்படுத்துவோம்’ என்று அவா் மேலும் தெரிவித்துள்ளாா்.