76 கோடி ரூபா மோசடி-இலங்கை வர்த்தகர் மாலைதீவில் கைது!

நாட்டில் சுமார் 76 கோடி ரூபா மோசடியில் ஈடுபட்ட இலங்கை வர்த்தகர் ஒருவர் மாலைதீவில் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சந்தேகநபர் கோடிக்கணக்கான பெறுமதியுடைய மாணிக்கக் கற்களை மோசடி செய்துள்ளதாகவும் இதன் பின்னர், நாட்டை விட்டு தப்பிச் சென்றதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மாலைதீவில் மறைந்திருந்த வர்த்தகரை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட குழுவொன்று மாலைதீவில் கைது செய்துள்ளது. சந்தேகநபருக்கு எதிராக சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையிலேயே தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.