அவிசாவளையில் வெடிப்புச் சம்பவம்– ஒருவர் பலி.

அவிசாவளை,  மாதோல பிரதேசத்தில் உள்ள பழைய இரும்பு பொருட்களை கொள்வனவு செய்யும் நிலையம் ஒன்றில் வெடிப்பு சம்பவம் இன்று  (06) பகல் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் காயமடைந்தவர் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.