போதைப்பொருள் பாவனை அதிகரிக்க அரசியல்வாதிகளே காரணம் எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு.

இலங்கையில் போதைப்பொருள் பாவனை அதிகரிக்க அரசியல்வாதிகளே காரணம் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. இதனை தடுத்து நிறுத்தாமையால் சிறுவர்களும் இளைஞர்களும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் விநியோகத்துடன் தொடர்புடையவர்கள் எவரும் இதுவரை முழுமையாக கைதுசெய்யப்படவில்லை. இதில் ஆட்சியாளர்களின் தலையீடு காணப்படுகின்றது.

போதைப்பொருள் விநியோகத்தை தடுப்பது மிகவும் கடினமான விடயமாக இருப்பதனால் போதைப்பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை அனைவரும் மேற்கொள்ள வேண்டும் என்றார்.