பிரான்ஸில் பாரிய போதைப்பொருள் கடத்தல் குற்றவாளி ரூபன் உடன் நேரடி தொடர்புடைய பெண் இலங்கையில் கைது.

‘டிஸ் கோ’ என அழைக்கப்படும் தர்மகீர்த்தி உதேனி இனுக பெரேரா என்ற பாரிய போதைப்பொருள் கடத்தல்காரர் ஹெரோயின் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.கடுவெல பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடைய அவரிடம் இருந்து 4 கூரிய ஆயுதங்கள் மற்றும் 14 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர் தற்போது பிரான்ஸில் வசிக்கும் பாரிய போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ‘ரூபன்’ என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுடன் நேரடி தொடர்பில் இருப்பதும் இந்த நாட்டில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு உதவுவதும் தெரியவந்துள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப் படையின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம், குறித்த பெண் நேற்று கொழும்பு 15, டெம்பிள் வீதி, மோதரையில் உள்ள வீடொன்றுக்கு முன்பாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.