கோட்டாபய ராஜபக்சவிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம், பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவுக்கு உத்தரவிட்டது. கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஆர்ப்பாட்டக்காரர்களால், கண்டுபிடிக்கப்பட்டு கோட்டைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு கோடியே 70 இலட்சம் ரூபா பணம் தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பெறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது தொடர்பான வழக்கு இன்று கோட்டை நீதிவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த, ஆர்ப்பாட்டக்காரர்களால் இந்தப் பணத்தொகை கண்டுபிடிக்கப்பட்டது.