இலங்கை வருகிறது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழு.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழுவொன்று இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அவர்கள் ஜனவரி 18ஆம் திகதி வரை நாட்டில் தங்கி கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளனர்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான துணை அமைச்சர் சென் ஜாவோ தலைமையில் இந்தக் குழு இலங்கை வரவுள்ளது.

அவர்கள் நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில், இலங்கை அரசின் பிரதானிகள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளனர்.