மோடியை கொல்லுங்கள் என பேசியவர் கைது.

மோடியை கொல்லுங்கள் என பேசிய குற்றத்திற்காக மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் முக்கிய தலைவர் ராஜா பட்டேரியா கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய பிரதேச மூத்த காங்கிரஸ் தலைவரான ராஜா பட்டேரியா முன்னதாக அவர் பேசிய ஒரு வீடியோ வெளியாகி இருந்தது. அதில், மோடியை கொல்லவேண்டும் என பேசியுள்ளார். அதாவது, கொல்வது என்றால் மோடியை தேர்தலில் தோக்கடிப்பது என்றும் விளக்கம் அளித்து இருந்தார்.

அந்த வீடியோ தொடர்பாக பாஜகவினர் போலீசில் புகார் அளித்து இருந்தார். இந்த புகார் எப்.ஐ.ஆரை தொடர்ந்து இன்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் அமைச்சருமான ராஜா பட்டேரியா கைது செய்ப்பட்டுள்ளார்.ராஜா பட்டேரியா கூறியது, பிரதமர் மோடி தேர்தல் நடைமுறைகளை அழித்துவிடுவார்.

அவர் மதம், சாதி, மொழி என எல்லோரையும் பிரித்து விடுவார். தலித்துகள், பழங்குடிகள், சிறுபான்மையினரின் எதிர்காலம் கேள்விக்குறியாக தற்போது இருக்கிறது. நீங்கள் அரசியல் சாசனத்தை காப்பாற்ற நினைத்தால் பிரதமர் மோடியை கொல்லுங்கள். அதாவது தேர்தலில் தோற்கடியுங்கள் என்று தான் பேசியுள்ளார் என காங்கிரஸ் மாநில துணை தலைவர் குறிப்பிட்டுள்ளார்.