அபிவிருத்தி குழு கூட்டம் என்ற பெயரில் காணிகளை அபகரிக்கும் அரசாங்கம்- பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்

அபிவிருத்தி குழு கூட்டம் என்ற பெயரில் காணிகளை அபகரிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எமது மாவட்ட அரச அமைச்சர் துணை போகின்றார் என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் இன்று(வெள்ளிக்கிழமை). பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டங்களை நடாத்தாமல், நேற்றைய தினம் அவசரமாக வாகரை பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் மாத்திரமே நடாத்தப்பட்டுள்ளது, அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் நடாத்தப்படுகின்றது.
இதனை நான் ஒரு சதி நடவடிக்கையாகவே பார்க்கின்றேன், குறிப்பாக வாகரையினை முற்றாக அரசாங்கத்திற்கு தாரை வார்ப்பதற்குரிய நடவடிக்கைகள் திரைமறைவில் முன்னெடுக்கப்படுகின்றது.
குறிப்பாக வாகரையில் இறால் வளர்ப்பு திட்டம் மற்றும் காணிகளை வழங்கும் திட்டங்களில் பாரியளவில் மோசடிகள் இடம்பெற்று வருகின்றது. அதேபோன்று சேதனப்பசளை என்ற பெயரில் ஊழல் மோசடிகள் இடம்பெறுகின்றது, இதற்கும் பிள்ளையான் துணை போகின்றார். அத்துடன், அபிவிருத்திக்குழு கூட்டங்களுக்கான அறிவிப்புகள் எமக்கு முறையாக விடுக்கப்படுவதில்லை. நான் இவ் கூட்டங்களில் கூட்டங்களில் பங்கேற்கக்கூடாது என்ற எண்ணத்திலேயே எனக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை என சந்தேகிக்கின்றேன்.
எனினும், எந்த சந்தர்ப்பத்தில் மக்களுக்காகவும், மக்களின் உரிமைகளுக்காகவும் நான் என்றும் குரல் கொடுக்க பின்னிற்கப்போவதில்லை.