டொலர்களை செலுத்தி அரசாங்க சொத்துக்களை வாங்கிய புலம்பெயர் இலங்கையர்கள்.

இலங்கையில் உள்ள வீடுகளை அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு 3 வீடுகளை விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதன்மூலம் 43,700 அமெரிக்க டொலர்களை அரசாங்கம் ஈட்டியுள்ளது.

பன்னிபிட்டிய – வியாட்புர, கொட்டாவ மற்றும் மாலம்பே பிரதேசங்களில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீட்டுத் தொகுதிகளில் இந்த 3 வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இன்னும் 10 வீடுகளை வாங்குவதற்கு புலம்பெயர்ந்த இலங்கையர்கள் விண்ணப்பங்களை அனுப்பியுள்ளனர்.

அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, ஐக்கிய அரபு இராச்சியம், பிரித்தானியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இலங்கையர்கள் இந்த விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.